ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட வாலிபர்.. பதைபதைக்கும் காட்சி..!

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை இரவு ஹவுரா-மால்டா டவுன் இன்டர்சிட்டி ரயில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் சஜல் ஷேக் என்ற இளைஞர் எறியுள்ளார். அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், இருக்கையில் அமராமல் சக பயணிகளுக்கு தொந்தரவாக இருந்ததால் சஜல் ஷேக்கிடம் வேறொரு பயணி ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, சஜல் ஷேக்கிற்கும் அவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ரயில் தாராபித் – ராம்பூர்ஹாட் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தபோது அந்த பயணி சஜல் ஷேக்கை ரயிலில் இருந்து தள்ளிவிட்டுள்ளார். இரவு நேரத்தில் ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட பயணி சஜல் ஷேக் நிலைமை என்ன ஆனது என்று சக பயணிகள் பீதியிலேயே பயணித்து வந்தனர்.

இந்த நிலையில், இதுகுறித்து ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சஜல் ஷேக் காயமடைந்த நிலையில் தண்டவாளத்தில் இருந்து மீட்டு ராம்பூர்ஹாட் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

சிகிச்சைக்கு பிறகு அவர் நலமாக இருப்பதாக ரயில்வேதுறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனிடையே, வாலிபரை ரயிலில் இருந்து தள்ளிவிட்ட பயணியை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.