சூட்கேசில் மனைவி உடலை வைத்துச் சென்றவர் கைது| Dinamalar

குருகிராம் : மனைவியை கொலை செய்து, உடலை சூட்கேசில் வைத்து தெருவில் வீசிச் சென்றவரை ஹரியானா போலீசார் கைது செய்தனர்.

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ‘இப்கோ சவுக்’ என்ற இடத்தில் கேட்பாரற்று ஒரு சூட்கேஸ் கிடந்தது. அதை போலீசார் திறந்து பார்த்தபோது, ஒரு பெண்ணின் உடல் இருந்தது தெரியவந்தது. அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போலீசார், ஆட்டோவில் வந்த ஒருவர், இந்த சூட்கேசை வீசிச் சென்றதை கண்டுபிடித்தனர்.

ஆட்டோ டிரைவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ராகுல் என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது, தன் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், அவரை கொலை செய்து, உடலை சூட்கேசுக்குள் வைத்து, தெருவில் வீசிச் சென்றதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.