வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கேப் கனாவெரல் : நிலவுக்கு மனிதனை அனுப்பும், , ‘ஆர்டெமிஸ்’ திட்டத்தின் சோதனை முயற்சி, இயந்திர கோளாறு காரணமாக மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்டதையடுத்து. வரும் 14-ம் தேதி சோதனை நடத்திட நாசா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா 1969ல் முதன்முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. இந்நிலையில், மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான, ‘ஆர்டெமிஸ்’ திட்டத்தை நாசா துவங்கியது. அது, 2025க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் முதல்கட்ட சோதனை முயற்சியாக, ஆர்டெமிஸ் – 1 ராக்கெட்டை நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக அனுப்ப உள்ளது. இந்த ராக்கெட் விண்வெளி ஆராய்ச்சிக்கான, ‘ஓரியன்’ விண்கலத்தை சுமந்து செல்கிறது. புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஆர்டெமிஸ் – 1 ராக்கெட் இந்திய நேரப்படி கடந்த ஆக.28-ம் தேதி, மாலை 6:00 மணிக்கு புறப்படுவதாக இருந்தது. கடைசி நிமிடத்தில், இயந்திரத்தில் எரிபொருள் கசிவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சோதனை முயற்சி ஒத்தி வைக்கப்பட்டது.தொடர்ந்து செப்.03ம் தேதி, மற்றும்
செப். 23-ம் தேதி சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு முயற்சியை மூன்று முறை நாசா ஒத்தி வைத்தது.
நவ.14-ல் ஏவ திட்டம்
தற்போது என்ஜின் எரிபொருள் கசிவுகள் சரி செய்யப்பட்டு வரும் நிலையில் வரும் 14-ம் தேதி ஏவ முடிவு செய்யப்பட்டு, இதன் கவுன்ட்டவுன் வரும் நவ. 12-ம் தேதி துவங்க உள்ளதாகவும், இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்ப்பட்டுள்ளதாக நாசா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முறை நாசாவின் முயற்சி வெற்றி அடையும் என கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement