நேற்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதற்கமைவாக ஒரு லீற்றர் சிலோன் வைட் டீசலின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 430 ரூபாவாகும்.
மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு லீற்றர்
மண்ணெண்ணெயின் புதிய விலை 365 ரூபாவாகும்.
சுப்பர் டீசல், ஒக்ரைன்-92 மற்றும் 95 பெற்றோல் என்பவற்றின் விலைகளில் எந்தவிதமான மாற்றம் செய்யப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதேவேளை, லங்கா ஐஓசி IOC நிறுவனமும் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் விலையை அதிகரித்துள்ளது.
ஒரு லீற்றர் ஓட்டோ டீசல் ரூ.15 வினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை ரூ.430. ஒரு லீற்றர் (Xtramile) டீசல் ரூ.15 வினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை ரூ.475.