மாலே மாலத்தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த ஏழு தொழிலாளர்கள் உடல்களை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை அந்நாடு எடுத்துள்ளது.
தெற்காசிய நாடான மாலத்தீவின் தலைநகர் மாலேயில் சமீபத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள ஒரு கட்டடத்தின் தரைதளத்தில் இருந்த கார் பழுதுபார்க்கும் மையத்தில் இந்த விபத்து ஏற்பட்டது.
அதன் மேல்தளத்தில் உள்ள விடுதிகளில், இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து வந்துள்ள தொழிலாளர்கள் தங்கியிருந்தனர். இந்த தீ விபத்தில், ௧௦ பேர் உயிரிழந்தனர்.
அதில், ஏழு பேர் இந்தியர்கள் என்றும், இரண்டு பேர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்; மற்றொரு வரின் அடையாளம் தெரியவில்லை. இறந்த இந்தியர்களில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்த மூன்று பெண்கள், நான்கு ஆண்கள் என, ஏழு பேரின் உடல்களை, இந்தியாவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளில், மாலத்தீவு அரசு ஈடுபட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement