தைவானில் மோதல், உக்ரைனில் சமாதானம்.. அமெரிக்கா – சீனா இருதரப்பு பேச்சு வார்த்தையில் உடன்பாடு.!

2022ம் ஆண்டுக்கான ஜி20 மாநாடு, இந்தோனேசியாவின் பாலி நகரில் நாளை, நவம்பர் 15 மற்றும் 16ம் தேதிகளில் இந்தோனேசியாவின் பாலியில் நடைபெறுகிறது. இதில அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஸ்கோல்ஸ் ஆகியோர் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.

ஜி-20 நாடுகளின் அமைப்பின் தலைமை பொறுப்பை, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு சுழற்சி முறையில் வகித்து வருகிறது. அந்த வகையில் வரும் டிசம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வரை, ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பை இந்தியா தலைமை ஏற்று நடத்துகிறது. ஜி-20 க்கான இந்தியாவின் கருப்பொருள் (தீம்) ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இந்தநிலையில் ஜி-20 மாநாட்டில் தைவான், உக்ரைன், வடகொரிய விவாகரங்கள் குறித்து அமெரிக்கா – சீனா இடையே இருதரப்பு பேச்சு வார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அந்தவகையில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று இருதரப்பு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு அதிகமான இந்த சந்திப்பில், இரு நாட்டு உறவுகள் குறித்து விரிவாக பேசப்பட்டது. இருநாடுகளுக்கும் இடையேயான நட்பை பலப்படுத்துவதன் குறீயீடாக, அமெரிக்க மாநில செயலாளர் ஆண்டனி பிலின்கன் சீனாவிற்கு பயணம் செய்வார் என அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார்.

மொரீஷியஸ் ஜனாதிபதி காஞ்சி கோயில்களில் சாமி தரிசனம்!

மேலும் பெய்ஜிங்கும் வாஷிங்டனும் தங்கள் வேறுபாடுகளை கடந்து, இரு நாடுகளுக்கு இடையேயான போட்டி, மோதலாக மாறுவதைத் தடுக்க முடியும் என்பதை உலகுக்குக் காட்ட பொறுப்பைப் பகிர்ந்து கொள்வதாக தெரிவித்துள்ளனர். சீன வெளியுறவு அமைச்சக அறிக்கையின்படி, “சீனா-அமெரிக்க உறவுகளில் கடக்க வேண்டிய முதல் சிவப்புக் கோடு தைவான்’’ என்று ஜி ஜின்பிங், பிடனிடம் கூறினார். ஆனால் தைவானை ராணுவ ரீதியாக பாதுகாக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக பிடன் கூறியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ள்து. அதேபோல் தைவான் விசயத்தில் சீனாவின் முரட்டுத்தனத்தை அமெரிக்கா ஆதரிக்காது எனவும் பிடன் கூறியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி; 15ம் தேதி அறிவிப்பை வெளியிடும் டிரம்ப்.!

உக்ரைன் போரில் ரஷ்யா அணு ஆயுதத்தை பயன்படுத்த அனுமதிக்க கூடாது எனவும் இருநாட்டு தலைவர்களும் உறுதி எடுத்துள்ளனர். அதேபோல் வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகள் மற்றும் விரைவில் 7வது அணு ஆயுத ஏவுகணை சோதனையை நடத்த இருக்கும் வடகொரியாவை சீனா கட்டுப்படுத்த வேண்டும் எனவும் பிடன் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.