ஜி – 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேஷிய நாட்டிற்கு சென்றடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் பாலி தீவில், நாளை (நவம்பர் 15) மற்றும் நாளை மறுநாள் ( நவம்பர் 16) ஆகிய இரு நாட்களில் ஜி – 20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள இன்று பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேஷியா சென்றடைந்தார். அங்கு அவருக்கு விமான நிலையத்தில் பாலி சென்றடைந்த அவரை அந்நாட்டு அரசு உயரதிகாரிகள், தூதரக அதிகாரிகள் வரவேற்றனர்.
உக்ரைன் போர் மற்றும் அதனால் உலக அளவில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் உள்ளிட்ட உலகளாவிய சவால்கள் குறித்து இந்த ஜி – 20 உச்சி மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம் மற்றும் சுகாதாரம் ஆகிய மூன்று முக்கிய அமர்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத் துறை செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்து உள்ளார்.
மேலும் உலகப் பொருளாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல், டிஜிட்டல் மாற்றம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியும் மற்ற நாடுகளின் தலைவர்களும் விவாதிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது தவிர ஜி – 20 தலைவர்கள் சிலரையும் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச உள்ளார்.