பெண் மருத்துவர் புகார்.. சிபிசிஐடி விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் தனியார் கருத்தரிப்பு மருத்துவமனை நிறுவனர் டாக்டர் தாமஸ் மீது, பெண் மருத்துவரின் புகார் குறித்து மீண்டும் விசாரணை நடத்த சிபிசிஐடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கருத்தரிப்பு மற்றும் ஆராய்ச்சி மருத்துவ மையம் நடத்தி வரும் டாக்டர் தாமஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கில், தன்னிடம் வேலை பார்த்த டாக்டர் ரம்யா என்பவர், எனது மருத்துவமனைக்கு எதிராக செயல்பட்டதால், அவரை கடந்த 2017 ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் மருத்துவர் போட்டி கருத்தரிப்பு மையத்தை உருவாக்கியும், தனது மருத்துவ மையத்திற்கு அவப்பெயரை உருவாக்கும் விதமாக செயல்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பெண் மருத்தவரை நான் பயங்கர ஆயுதங்களால் தாக்கியதாக அவர் கடந்த 2017 அக்டோபர் மாதம் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை செம்பியம் போலீசார் தன் மீதும், தனது ஊழியர்கள் மீதும் கொலை முயற்சி, உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தததாக தெரிவித்துள்ளார்.

பெண் மருத்துவருக்கு உடந்தையாக செம்பியம் காவல் நிலைய ஆய்வாளர் நடந்து கொண்டதாகவும், 2017 ஆண்டு நவம்பர் மாதம் தன் டாக்டர் ரம்யாவின் சகோதரி (தங்கை) அளித்த புகாரில் மீது மற்றொரு கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், இந்த முறை டாக்டர் ரம்யாவின் சகோதரி நிர்மலாவைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டதாகவும் அடுத்தடுத்த மாதத்தில், இரண்டு கிரிமினல் வழக்குகளின் அடிப்படையில் என்னை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

எனக்கு எதிரான குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2017 டிசம்பரில் ரத்து செய்தாகவும், தனது முன்னாள் பணியாளரும், பெண் மருத்துவரும் இணைந்து தன்னைக் கொலை செய்ய ஆட்களை ஈடுபடுத்தியதாகக் மனுவில் புகார் தெரிவித்துள்ளார்.

எனவே எனக்கு எதிரான செம்பியம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு சென்னை மகளிர் நீதிமன்றம் மற்றும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையை ரத்து செய்ய வேண்டும்; செம்பியம் காவல் நிலையத்தில் உள்ள புகாரின் பின்னணியில் உண்மையைக் கண்டறியும் வகையில் சிபிசிஐடி உயர் அதிகாரிகள் கண்காணிப்பில் ஆய்வாளர்கள் அந்தஸ்து குறையாத அதிகாரியை கொண்டு மீண்டும் உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதார் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், தவறான புகாரில் அடிப்படையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.

பின்னர் உத்தரவிட்ட நீதிபதி, மனுதாரர் எதிரான சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணை ரத்து செய்வதாகவும், செம்பியம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார். சிபிசிஐடியில் ஆய்வாளர்கள் குறையாத அதிகாரியை நியமித்து சென்னை செம்பியம் காவல் மருத்துவர் தாமஸ்க்கு எதிரான புகாரின் பின்னணி குறித்தும், உண்மை நிலை குறித்தும் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.