ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்குப் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மழையால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்துக்குட்பட்ட சீர்காழி வட்டத்துக்குட்பட்ட பகுதிகளி்ல் கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 11) 40 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகி இருந்தது. 122 ஆண்டுகளுக்கு பிறகு, ஒரே நாளில் கொட்டித் தீர்த்த கனமழையால் குடியிருப்புகள், வயல்வெளிகள் வெள்ளக்காடாய் காட்சி அளிக்கின்றன.

இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு செய்து, மீட்பு பணிகளை பார்வையிட்டு, பல்வேறு அரசு துறை அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இந்த நிலையில், மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களைச் சேர்ந்தவர்களின் ரேஷன் அட்டைக்கு தலா 1000 ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தின் சீர்காழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும், வெள்ளத்தால் சூழப்பட்ட விளைநிலங்களையும் முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.