புற்றுநோய்க்கான மருந்தை போலியாக தயாரித்து விற்பனை செய்த மருத்துவர் உள்பட 7 பேரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
4 ஆண்டுகளாக செயல்பட்ட இக்கும்பலை கண்காணித்து பிடித்ததோடு ஹரியானாவில் தலா ஒரு தொழிற்சாலை, குடோனை சீல் வைத்து 8 கோடி ரூபாய் மதிப்பிலான போலி மருந்துகள் கைப்பற்றப்பட்டதாக சிறப்பு குற்றப்பிரிவு கமிஷனர் ஆர்.எஸ்.யாதவ் கூறினார்.
தலைமறைவான மேலும் 3 பேரை தேடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.