நிலுவைத் தொகைக்காக பிச்சை எடுக்க வேண்டுமா? மம்தா பானர்ஜி ஆவேசம்

கொல்கத்தா:
நிலுவைத்தொகைக்காக பிச்சை எடுக்க வேண்டுமா என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் ஆவேசமாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மாநிலங்களுக்கு வழங்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக குற்றம் சாட்டப்படும் நிலையில் இதுகுறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆவேசமாக பேசியுள்ளார்

மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை தராவிட்டால் ஜிஎஸ்டி செலுத்துவதை நிறுத்தி நேரிடும் என்று கூறியுள்ள மம்தா பானர்ஜி நிலுவைத் தொகையாக நாங்கள் பிச்சை எடுக்க வேண்டும் என நினைக்கிறீர்களா என்று கேட்டுள்ளார்

நிலுவைத் தொகையை உடனே வழங்குங்கள் அல்லது பதவி விலகுங்கள் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆவேசமாக பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.