19 கல்வியியல்  கல்லூரிகளை ஒன்றிணைத்து பல்கலைக்கழகம் அமைக்க திட்டம்

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டின் பின்னர், தற்போதுள்ள 19 கல்வியற் கல்லூரிகளை ஒன்றிணைத்து ஒரு பல்கலைக்ழகமாக அமைத்து, அதில் பீடங்களை உருவாக்க நடவடிக்கை எடுப்போம்.

அதன்படி, இந்த பல்கலைக்கழகத்தினூடாக பட்டதாரிகளை உருவாக்க எதிர்பார்க்கின்றோம் என்று கல்வி அமைச்சர் சுசில் பரேம்ஜயந்த தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் (20) நடைபெற்ற வரவு செலவு திட்டம் தொடர்பான, மக்களுக்கு தெளிவூட்டும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு அறிவித்தார்.

மேலும், பயிற்றுவிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் ஒருவரை வகுப்பறைக்கு நியமிக்க எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.