கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தச்சூர் அருகே இன்று மாலை தனியார் பள்ளி வாகனம் ஒன்று சாலையின் நடுவேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த இடத்திற்கு கள்ளகுறிச்சி மாவட்ட ஆட்சியர், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., மாவட்ட எஸ்.பி. ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்துள்ளனர்.
மேலும் ஒரு அண்மைய செய்தி : இன்று மாலை 6.45 மணிக்கு, தாம்பரம் பகுதியில் வந்து கொண்டிருந்த தமிழக அரசின் குளிர்சாதன பேருந்தின் மேற்கூரையில் இருந்து புகை வந்துள்ளது.
புகை வருவதை கண்ட பயணிகள் அலறி கூச்சல் இடவே, உடனடியாக பயணிகள் இறக்கி விடப்பட்டனர். மேலும், பேருந்தில் ஏற்பட்ட புகையை தண்ணீர் ஊற்றி அணைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் தாம்பரம் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முதல்கட்ட தகவலின்படி குளிர்சாதன மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறால் பேருந்தில் புகை வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.