விழுப்புரம் மாவட்டத்தில் தலையில் அண்டாவை கவிழ்த்து மளிகை கடையில் திருடிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி பஜாரில் உள்ள மளிகை கடை ஒன்றில்கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மாடி வழியாக கதவை உடைத்து திருடன் உள்ளே புகுந்துள்ளான். இதில் அங்குள்ள சிசிடிவி கேமராவில் முகம் தெரியாமல் இருப்பதற்காக திருடன் தலையில் அண்டாவை கவிழ்த்து டார்ச் லைட் மூலமாக கடையில் இருந்த பணத்தை திருடிச் சென்றான்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து கடை உரிமையாளர் ராஜகோபால் செஞ்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சி மூலம் குற்றவாளியை தீவிரமாக போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் சுற்றித்திரிந்த இரண்டு பேரை பிடித்து போலித்தார் விசாரணை மேற்கொண்டதில், தலையில அண்டாவை கவிழ்த்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சக்கராபுரம் பகுதியை சேர்ந்து உத்தரவேல், வெங்கடேசன் மற்றும் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த கர்ணன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.