டெஸ் கிரிக்கெட் போட்டி: இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது இந்திய அணி

வங்காள தேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இதன்மூலம் உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

தொடர் வெற்றியின் மூலமாக, இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை தக்கவைத்து கொண்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளில் ஒவ்வொரு அணியும் பெரும் வெற்றியின் வீதத்தின் அடிப்படையில், 2 அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிடும்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்த உலகச் சாம்பியன்ஷிப் முறை 2019 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் 2021 –ல் இறுதிப்போட்டி, அதிகபட்ச வெற்றி வீதத்தின் அடிப்படையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடத்தப்பட்டது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு பின்னர் அடுத்த ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இதற்காக உலகின் முன்னணி கிரிக்கெட் அணிகள் தயாராகி வந்த நிலையில், வங்காள தேசத்திற்கு எதிரான கிரிக்கெட் தொடரை 2 – 0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியதை தொடர்ந்து, புள்ளிப்பட்டியில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.