புதுடெல்லி: கடந்த ஆண்டு ராணுவ தினத்தின்போது, மேம்படுத்தப்பட்ட புதிய ராணுவ சீருடையை இந்திய ராணுவ தளபதி அறிமுகப்படுத்தினார். இந்நிலையில், வடிவமைப்பு உள்ளிட்ட அம்சங்களுக்காக அச்சீருடைக்கு இந்திய ராணுவம் அறிவுசார் சொத்துரிமை பெற்றுள்ளது. வடிவமைப்புக்கான காப்புரிமை, இன்னும் 10 ஆண்டுகளுக்கு ராணுவத்திடமே இருக்கும்.
அதன்பிறகு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படக்கூடும். இதன் மூலம் ராணுவத்தின் அனுமதியின்றி அந்த சீருடையை உற்பத்தி ெசய்து வெளிச்சந்தையில் விற்பதை தடுக்க முடியும் என்று கூறப்படுகிறது. அதற்காக ராணுவம் அறிவுசார் சொத்துரிமை பெற்றுள்ளது. அதை மீறி யாராவது போலியாக தயாரித்தால், அவர்கள் மீது ராணுவம் சட்ட நடவடிக்கை எடுக்கும். ராணுவம் நடத்தும் கேன்டீன்களில் மட்டுமே இந்த சீருடை விற்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.