நாடாளுமன்றத்தில் நேதாஜி பிறந்தநாள் விழா 80 மாணவர்கள் பங்கேற்பு

புதுடெல்லி: முக்கிய தலைவர்களின் பிறந்தநாளில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடக்கும் விழாவில் அரசியல் தலைவர்கள் மட்டும் பங்கேற்பார்கள். பிரதமர் மோடியின் அறிவுரையின்படி மாணவர்களும் பங்கேற்கும் நடைமுறை கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி முதல் பின்பற்றப்படுகிறது. இன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து நாடாளுமன்றத் தின் மைய மண்டபத்தில் உள்ள நேதாஜியின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்ய நாடு முழுவதும் இருந்து 35 மாணவிகள், 45 மாணவர்கள் என 80 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.