விருதாசலம் அருகே கால்வாயில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 40 பேர் காயம்

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே சோமங்கலம் கிராமத்தில் அரசு பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 40 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்த பயணிகள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கால்வாயில் கவிழ்ந்து பேருந்து விபத்துகுள்ளனது. பேருந்தில் பயணித்தவர்களில் 15-க்கும் மேற்பட்டோருக்கு தலை, கை, கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது.  

சேப்பாக்கம் இருந்து விருத்தசலத்துக்கு சென்ற அரசு பேருந்தை ஓட்டுநர் சரவணன் இயக்கி வந்தார். இதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்தார். விருத்தாசலம் நோக்கி வரும் போது கோமங்கலம் கிராமத்தை கடக்கும் போது எதிரே நெல் அறுவடை இயந்திரம் வந்ததால் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பேருந்தில் இருந்த பயணிகள் அதிகமாக கூச்சலிட்டதால் அருகே உள்ள மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அந்த பேருந்தில் இருந்த பயணிகளை வெளியேற்றினார். இதன் பிறகு ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத்துறை, காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். காயமடைந்த பயணிகள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.