சேர் எடுத்து வர தாமதமானதால் தொண்டர் மீது கல்லை தூக்கி எறிந்த அமைச்சர் நாசர்..!

திருவள்ளூர் அருகே ஆய்வுப் பணிக்குச் சென்ற போது சேர் எடுத்து வர காலதாமதமானதால் டென்சனான அமைச்சர் சா.மு.நாசர், தொண்டர் மீது கல் வீசிய வீடியோ வெளியானது.

வேடங்கிநல்லூரில் திமுக சார்பில் நாளை நடைபெற உள்ள மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

இதனை முன்னிட்டு விழா ஏற்பாடு பணிகளை ஆய்வு செய்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், நாற்காலிகளை எடுத்து வர கட்சித் தொண்டர்களிடம் கூறினார்.

கட்சி நிர்வாகிகள் அதிகமானவர்கள் இருந்த நிலையில் ஒருசில நாற்காலிகள் மட்டுமே எடுத்து வரப்பட்டதோடு, தாமதமும் ஆனதால் தனது  கோபத்தை தொண்டர் மீது அமைச்சர் நாசர் வெளிப்படுத்தினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.