2023 பத்ம விருதுகள் அறிவிப்பு; தமிழகத்தில் 6 பேர் தேர்வு.!

கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், பொறியியல், வர்த்தகம், அறிவியல், தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, சிவில் சர்வீஸ் போன்ற பல்வேறு துறைகளிலும் செயல்பாடுகளிலும் சிறந்து விளங்குபவர்களுக்காக பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகிறது.

நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அந்தவகையில் நடப்பு ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு கடந்த மே 1ம் தேதி விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை முடிவடைந்து, நடப்பு ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுவோர் பட்டியல் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டது.

அதன்படி மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 106 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. நீர்ச்சத்து குறைபாட்டுக்கு தீர்வு காணும் ஓ.ஆர்.எஸ்.கரைசலை கண்டுபிடித்த சாதனைக்குரிய மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மறைந்த மருத்துவர் திலீப் மஹாலானாபிஸுக்கு பத்ம வுபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சமாஜ்வாடி கட்சியின் மறைந்த தலைவர் முலாயம் சிங் யாதவ், பொது விவகாரத் துறையில் பத்ம விபூஷன் விருது பெற்றுள்ளார். ஜாஹிர் ஹுசைன் கலைத் துறையில் பத்ம விபூஷன் பெற்றார். கேஎம் பிர்லா வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்காக பத்ம பூஷன் பெற்றார். அதேபோல் சுதா மூர்த்தி சமூகப் பணிக்காக பத்ம பூஷன் பெற்றார்.

அதேபோல் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் சமூக பணிகள் பிரிவில் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஒன்றிய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வானது குறித்து பாம்புபிடி வீரர் மாசி சடையன் கூறும்போது, ‘‘இதுவரை எண்ணிலடங்கா பாம்புகளை பிடித்திருக்கிறோம். எப்போதும் கணக்கு வைத்துக் கொள்ள மாட்டோம். இந்த விருது பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து வடிவேல் கோபால் கூறும்போது, ‘‘இந்த விருது பெறுவதில் மகிவும் மகிழ்ச்சியடைகிறோம். தாய்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட ஏராளமான நாடுகளுக்கு சென்று பாம்பு பிடித்திருக்கிறோம். அதிக விஷத்தன்மை உள்ள பாம்புகளை பிடித்திருக்கிறோம். அதேபோல் இந்தியாவின் ஏராளமான மாநிலங்களுக்கு சென்று ஏராளமான பாம்புகளை பிடித்திருக்கிறோம். எங்களை பொறுத்தவரை ராஜநாகம் அதிக விஷத்தன்மை உள்ள பாம்புகள்.

கரகாட்ட இசை கலைஞர்களின் நடன நிகழ்ச்சியில் கலை நயத்துடன் ஆட்டம் போட்ட மதுப்பிரியர்.

எங்கள் தந்தை காலத்தில் இருந்து பாம்பு பிடித்து வருகிறோம். இதுவரை கண்ணாடி விரியன், நல்ல பாம்பு உள்ளிட்ட ஏராளமான பாம்புகள் கடித்திருக்கின்றன. ஆனால் அதற்கான முன்னேற்பாடுகளுடன் இருப்போம். எங்களுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது’’ என்று தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தைச் சேர்ந்த வானி ஜெயராமுக்கு கலை பிரிவில் பத்ம பூஷன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேபோல் கல்யாண சுந்தரம் பிள்ளை கலை பிரிவிலும், பாலம் கல்யாண சுந்தரம் சமூக பணி பிரிவிலும், டாக்டர் கோபால்சாமி வேலுச்சாமி மருத்துவ பிரிவிலும் பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.