இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற கட்டுப்பாடுகள்: பிசிசிஐ முடிவு| BCCI review: Yo-Yo test returns, Dexa also added to selection criteria for Indian team

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை: இந்திய அணியில் இடம்பெறுவதற்கு யோ யோ சோதனை, டெக்சா( எலும்பு ஸ்கேன் சோதனை) ஆகியவற்றில் தேர்வு பெற வேண்டும் எனவும், உள்ளூர் போட்டிகளில் இடம்பெற வேண்டும் எனவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளது. டுவென்டி- 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதியுடன் நாடு திரும்பிய நிலையில், இந்தாண்டு இந்தியாவில் நடக்கும் ஒரு நாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு அணியை தயார் செய்வது குறித்து பிசிசிஐ … Read more

என்னை தொடர்ந்து என் மகள் மீதும் சைபர் தாக்குதல் ; குமுறும் பிரவீணா

தமிழில் சின்னத்திரை தொடர்களில் நடித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றவர் மலையாள நடிகை பிரவீணா. மலையாள திரையுலகில் அழகான அம்மா கதாபாத்திரம் என்றால் முதல் சாய்ஸ் இவராகத்தான் இருக்கிறார். கடந்த 25 வருடங்களுக்கு மேலாக மலையாளம் மற்றும் சமீப காலமாக தமிழ் திரையுலகில் நடித்து வரும் இவர், கடந்த வருடம் திருநெல்வேலியைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவர் மீது சைபர் கிரைம் புகார் அளித்தார். தன்னுடைய புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அவற்றை தன்னை சார்ந்தவர்களுக்கும் மற்றும் சோசியல் … Read more

ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு: திருச்சிக்கு திங்கள் கிழமை உள்ளூர் விடுமுறை

ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு: திருச்சிக்கு திங்கள் கிழமை உள்ளூர் விடுமுறை Source link

#BREAKING | சேலம், ஆத்தூரில் கோவில் மற்றும் 5 வீடுகளில் தீவிபத்து!

ஆத்தூர் அருகே கோவில் மற்றும் அடுத்தடுத்த ஐந்து வீடுகளில் திடீரென தீப்பற்றி எரிந்ததால், முற்றிலுமாக வீடுகள் மற்றும் கோவில் இருந்து சேதம் ஆகி உள்ளன. சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே அடுத்தடுத்த ஐந்து வீடுகள் மற்றும் ஒரு கோவிலில் திடீரென இன்று பிற்பகல் தீப்பற்றி எரிந்தது. இதனால் அலறி அடித்து ஓடிய பொதுமக்கள், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வாகனம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அனைத்து கட்டுப்படுத்தினர்.  மேலும் இந்த … Read more

“தொகுப்பூதிய செவிலியர்கள் பணிநீக்கம்; திமுக அரசின் தொழிலாளர் விரோத போக்கு" – சீமான் காட்டம்

“தன்னலமற்று சேவையாற்றிய செவிலியர்களின் உழைப்பினை உறிஞ்சி விட்டு, தற்போது வேலை இல்லை என்று கூறி ஒரே நாளில் வீட்டிற்கு அனுப்புவது கொடுங்கோன்மை” என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் மேலும், “கொரோனா பெருந்தொற்று தடுப்புப் பணிகளுக்காக தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை, தமிழ்நாடு அரசு பணிநீக்கம் செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. பேரிடர் காலத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது தன்னலமற்று சேவையாற்றிய செவிலியர்களின் உழைப்பினை உறிஞ்சி விட்டு, தற்போது வேலை இல்லை … Read more

பாஜகவின் வளர்ச்சிக்கு அதிமுக காரணம் என்று சொல்லமுடியாது: வைகோ பேட்டி

சென்னை: “பாஜகவின் வளர்ச்சிக்கு அதிமுக காரணம் என்று சொல்லமுடியாது. தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியை ஏடுகளும் ஊடகங்களும் பெரிதுபடுத்துகின்றன. அவர்கள் வளர்ந்த அளவைவிட, பலமடங்கு ஏடுகளும் ஊடகங்களும் பிரம்மாண்டமான தோற்றத்தைக் கொடுக்கின்றன” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில், எதிர்க்கட்சிகளிடம் பலமான ஒற்றுமை இல்லாதது குறித்து கேள்வி எழுப்பப்பப்டடது. அதற்கு அவர், “இந்தியாவில் … Read more

பாலியல் புகார்: ஹரியாணா விளையாட்டுத் துறை அமைச்சர் சந்தீப் சிங் ராஜினாமா

சண்டிகர்: ஹரியாணா மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் சந்தீப் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் மீது தடகள விளையாட்டு பெண் பயிற்சியாளர் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் அளித்துள்ள விளக்கத்தில், “எனது பிம்பத்தை கெடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன. என் மீதான குற்றச்சாட்டுகள் போலியானவை. அந்தப் புகார் தொடர்பாக நேர்மையான விசாரணை நடத்தப்படும் என்று நம்புகிறேன். அதனால் நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” … Read more

ராகுல் யாத்திரை அரசியல் மாற்றத்தை கொண்டுவரும்; சஞ்சய் ராவத் உறுதி.!

கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (பாரதமே ஒன்றிணைவோம்) என்ற பெயரில் 3,500 கிலோ மீட்டர் தூரம், 150 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்கிறார் அக்கட்சியின் முன்னாள் அகில இந்திய தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி. ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் கூட்டணி கட்சியினர், பொதுமக்கள், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இந்தியா மட்டுமல்லாது உலக அளவிலும் ராகுல் காந்தியின் பாத்யாத்திரை பேசு பொருளாகியுள்ளது. … Read more

மகாராஷ்டிரா நாஷிக்கில் தீ விபத்து : தொழிற்சாலை உள்ளே சிக்கிய பணியாளர்கள் – தொடரும் மீட்புப்பணி!

Fire Breakout in Nashik : மகாராஷ்டிரா மாநிலம் நாஷிக் நகரில் உள்ள தொழிற்சாலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நாஷிக் நகரின் முந்தேகான் கிராமத்தில் உள்ள அந்த தொழிற்சாலையில் உள்ள பெரிய கொதிகலன் வெடித்ததில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  இந்த தீ விபத்து சம்பவம் இன்று காலை 11 மணிக்கு நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது தீ விபத்தை அணைக்க பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். … Read more

நலிவடைந்த நிலையில் மண் பாண்ட தொழிலாளர்கள்! அரசிடம் வைத்துள்ள கோரிக்கை!

பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில், மண்பாண்ட தொழிலாளர்கள் சட்டி, பானை போன்ற பொருட்களை செய்வதில் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே மூலங்குடி பகுதியில், பிரபு குடும்பத்தினர், தலைமுறை தலைமுறையாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சட்டி, பானை உள்ளிட்ட பொருட்களை தற்போது செய்து வருகின்றனர். கடந்த காலங்களில் மக்கள் மண்பாண்டங்களில் தான் சமையல் செய்து வந்தனர். தற்பொழுது கிராமப் … Read more