மியான்மரில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல்; ராணுவ அரசு அறிவிப்பு.!

ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கடந்த 2021 பிப்ரவரி 1ம் தேதி நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் இருந்து மியான்மர் ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மர், சர்வதேச தனிமைப்படுத்தல் மற்றும் மேற்கத்திய தலைமையிலான தடைகளை எதிர்கொண்டது.

மியான்மரில் ராணுவம் ஆட்சியைப் பிடித்ததில் இருந்து மியான்மர் குழப்பத்தில் உள்ளது. ஆங் சாங் சூகி மற்றும் மற்ற அதிகாரிகளையும் காவலில் ராணுவம் வைத்தது. ஆதேபோல் ஜனநாயகத்திற்கு ஆதரவான போராட்டங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளுக்கு மிருகத்தனமான சக்தியுடன் பதிலளித்து, நூறாயிரக்கணக்கான மக்களை இடம்பெயரச் செய்தது.

இரத்தம் தோய்ந்த ஒடுக்குமுறைகளுக்குப் பிறகு தெருப் போராட்டங்கள் இப்போது அரிதாக இருந்தாலும், ராணுவம் சிறுபான்மை இன சக்திகளுடன் கிட்டத்தட்ட தினசரி மோதல்களில் ஈடுபட்டுள்ளது மற்றும் பாதுகாப்பின்மை நாடு முழுவதும் பரவியுள்ளது.

இதற்கிடையில், ஆங் சாங் சூகி சமீபத்தில் ஐந்து ஊழல் குற்றச்சாட்டுகளுக்குத் தண்டிக்கப்பட்டு மேலும் ஏழு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார. அதன் ஆட்சிக்கு பரவலான உள்நாட்டு எதிர்ப்பிற்கு மத்தியில் ராணுவ ஆட்சிக்குழுவின் மிகப்பெரிய அச்சுறுத்தலைத் தடுக்க வடிவமைக்கப்பட்ட ஒரு ஏமாற்று நாடகம் என்று சர்வதேச அளவில் கண்டனம் செய்யப்பட்டது. சூகி நேபிடாவில் உள்ள தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் மியான்மரின் ராணுவ அரசாங்கம், நாட்டின் சுதந்திர தினத்தைக் குறிக்கும் வகையில் பொது மன்னிப்பின் கீழ் 7,012 கைதிகளை விடுவிக்கும் என்று தெரிவித்துள்ளது. அதேபோல் ராணுவத் தலைவர் தனது தேசத்திற்கு ஆதரவைப் பேணுவதற்கு சில நாடுகளை பாராட்டினார்.

“எல்லா அழுத்தங்கள், விமர்சனங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு மத்தியிலும், எங்களுடன் சாதகமாக ஒத்துழைத்த சில சர்வதேச மற்றும் பிராந்திய நாடுகள், அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்” என்று மூத்த ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் மியான்மரின் 75வது சுதந்திர தின உரையில் கூறினார்.

‘‘சீனா, இந்தியா, தாய்லாந்து, லாவோஸ் மற்றும் பங்களாதேஷ் போன்ற அண்டை நாடுகளுடன் நாங்கள் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். எல்லை ஸ்திரத்தன்மை மற்றும் மேம்பாட்டிற்காக நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம்,” என்று மின் ஆங் ஹ்லைங் தலைநகர் நய்பிடாவில் நடந்த ராணுவ அணிவகுப்பில் உரையாற்றினார்.

இந்தநிலையில் மியான்மரின் குறுகிய கால ஜனநாயக ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பொதுத்தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளது. இது இராணுவ ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு மேலும் மேலோங்கி இரத்தக்களரியைத் தூண்டும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

தளங்களின் கடவுச்சொல்லை சேமிக்க சிறந்த ஐந்து செயலிகள்

தற்போதைய சூழ்நிலையில் திட்டமிடப்பட்ட வாக்கெடுப்பு சுதந்திரமாகவும் நியாயமாகவும் இருக்க முடியாது என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ராணுவ ஆட்சிக்குழுவின் அதிகாரத்தை நியாயப்படுத்தும் நோக்கில் வெறும் ஒரு நாடகமாகத்தான் இந்த தேர்தல் இருக்கும் என்று விமர்சகர்கள் வகைப்படுத்துகின்றனர்.

கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு; ஜப்பான் முதல்வர் அறிவிப்பு.!

மேலும் மியான்மர் ராணுவ ஆட்சிக்கு சீனா தனது ராணுவ ஒத்துழைப்பை வழங்குவதாக தற்போது அறிவித்துள்ளது. ராஜந்தந்திர முறையில் ராணுவ ஒத்துழைப்பை வழங்க சீனா முடிவுசெய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.