பாக்.அரசின் கடன் மேலாண்மை திட்டத்தை நிராகரித்தது IMF..

பாகிஸ்தான் அரசின் கடன் மேலாண்மை திட்டத்தை சர்வதேச நாணய நிதியம் நிராகரித்துவிட்டது. ஐஎம்எப் கடனை பெரிதும் நம்பியிருந்த பாகிஸ்தான் ஏமாற்றத்துக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடனைத் திருப்பிச் செலுத்தும் வகையில் மின்கட்டணத்தை யூனிட்டுக்கு 12 ரூபாய் வரை உயர்த்த வேண்டும் என்பது போன்ற சில கெடுபிடிகளை பாகிஸ்தான் வந்துள்ள ஐ.எம்.எப் குழு விதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டு உள்ளது. இதற்காக சி.டி.எம்.பி. எனப்படும் கடன் மேலாண் திட்டம் ஒன்றை வகுத்து பாகிஸ்தான் அனுப்பிய நிலையில் அதனை ஐ.எம்.எப். ஏற்காமல் நிராகரித்து விட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.