தமிழ் பெயர் பலகை விவகாரம் | நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதான நீதிமன்ற அவமதிப்பு – அறிக்கை அளிக்க உத்தரவு

மதுரை: தமிழில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி, வழக்கறிஞர் தீரன் திருமுருகன் தொடர்ந்த வழக்கின் விசாரணை மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுவாமிநாதன் வழக்கை விசாரித்தனர்.

அப்போது, அரசுத் தரப்பில், அரசாணைப்படி பெயர் பலகை வைக்காததற்காக ரூ.50 அபராதமாக வசூலிக்கப்படுகிறது. அபராத தொகையை உயர்த்தி வசூலிக்கும் திட்டம் அரசின் ஒப்புதலுக்கென உள்ளது. 2018-2022 வரை 6,074 கடைகளில் ரூ.4.58 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. உணவக சட்டப்படி 349 உணவகங்களிடம் இருந்து ரூ.32,800 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை முறையாக பின்பற்ற அவ்வப்போது ஆய்வு கூட்டங்கள் நடத்தப்படுகிறது என கூறப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.