டெல்லியில் பிரதமரை சந்தித்தார் உதயநிதி ஸ்டாலின்..!

தமிழக அமைச்சரவையில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் தனது முதல் அரசுமுறை பயணமாக டெல்லிக்கு சென்றுள்ளார். டெல்லிக்கு 2 நாட்கள் பயணமாக சென்றுள்ள உதயநிதி அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்து பிரதமர் மோடியை சந்திப்பது இந்த பயணத்தின் அஜெண்டாவாக இருந்தது. மேலும், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை சந்தித்து வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டெல்லிக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின் டெல்லி தமிழ்ச்சங்கத் தலைவர்களை சந்தித்தார். … Read more

Vijay: விஜய்யின் தொடர் வெற்றிக்கு காரணம் என்ன..?: அப்பா எஸ்.ஏ.சி அதிரடி.!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக திகழ்பவர் விஜய். இவரின் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும். இவர் தற்போது லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஜய் குறித்து பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நடிகராக திகழும் விஜய்யின் ஆரம்பக்கால திரை பயணத்திற்கு உறுதுணையாக இருந்தவர் இவரின் தந்தை எஸ்.ஏ. … Read more

திருப்பத்தூர் அருகே இரண்டு வயது பெண் குழந்தை நீர்த்தேக்க தொட்டியில் விழுந்து உயிரிழப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே இரண்டு வயது  பெண் குழந்தை நீர்த்தேக்க தொட்டியில் விழுந்து உயிரிழப்பு! உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் கொடுக்க வேண்டும் என திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டம்! பத்து ஆண்டுகளுக்குப்பின் பிறந்த குழந்தை என உறவினர்கள் கதறியது பார்ப்பவர் நெஞ்சத்தை பதைபதைக்க வைத்தது.  திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெரியகரம் பகுதியைச் சார்ந்த சுந்தர்  ராதிகா இவர்களுக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இந்த நிலையில் திருமணம் ஆகி 10 வருடங்களுக்குப் பிறகு … Read more

அமெரிக்காவில் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் வீசி வரும் கடும் பனிப்புயலால் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

அமெரிக்காவின் மேற்கு மண்டலத்தில் உள்ள நெவாடா நகரில் வீசி வரும் கடும் பனிப்புயலால் அந்நகரத்தின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பனிப்புயலால் அங்குள்ள தஹோ ஏரி பனிகட்டியாக உறைந்துள்ள நிலையில், நாளை வரையில் அப்பகுதியில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பனிக்காற்று வீசும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதோடு, தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாமெனவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், சாலைகளில் கொட்டிக் கிடக்கும் பனிக்கட்டிகளை அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. Source link

டெல்லி துணை முதலமைச்சர் பொறுப்பில் இருந்து மணீஷ் சிசோடியா ராஜினாமா..!

டெல்லி துணை முதலமைச்சர் ராஜினாமா டெல்லி துணை முதலமைச்சர் பொறுப்பில் இருந்து மணீஷ் சிசோடியா ராஜினாமா மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ கைது செய்த நிலையில் ராஜினாமா மணீஷ் சிசோடியாவின் ராஜினாமாவை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக் கொண்டார் ஏற்கனவே கைதான சத்யேந்திர ஜெயினும் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார் Source link

பிரதமர் மோடியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

டெல்லி: இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை டெல்லியில் பிரதமர் மோடியை  நேரில் சந்தித்தார். அமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடியை உதயநிதி ஸ்டாலின் சந்தித்துள்ளார். தலைநகர் டெல்லிக்கு இரண்டு நாட்கள் பயணமாக தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்றுள்ளார். அவர்,  தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும் பஞ்சாப் மாநிலத்தின் தற்போதைய ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித்தின் பேத்தியின் திருமண … Read more

போடி அருகே அடகுபாறை மலையில் 2வது நாளாக தொடரும் தீ: அணைக்கும் பணி தீவிரம்

போடி: போடி அருகே அடகுபாறை மலையின் வனப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் 2வது நாளாக ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டம், போடி அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் போடிமெட்டு, குரங்கணி உள்ளிட்ட ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. இந்த வரிசையில் குரங்கணி, கொட்டகுடி பகுதியில் பல்வேறு கிராமங்களில் ஏலம், காபி, மிளகு, இலவம், மா, எழுமிச்சை, கொய்யா உள்ளிட்ட பல்வேறு விவசாய சாகுபடி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே முந்தல் மலை அடிவாரத்தில் … Read more

புதிய வைரஸ்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளது: உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா தகவல்

ஜெனிவா: புதிய வைரஸ்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நம்முடன்தான் இருக்கும்; தடுப்பு, நோய் எதிர்ப்பு சக்தியால்தான் தடுக்க முடியும். காய்ச்சல் வருவது சாதாரணமானது; எதனால் வருகிறது என பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.

நீட் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் சட்டப்போராட்டம் தொடரும் என பிரதமர் மோடியிடம் தெரிவித்தேன்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

டெல்லி: டெல்லி வரும் போது தன்னை சந்திக்கும்படி பிரதமர் மோடி கூறியிருந்தார், அதன்படி இன்று அவரை சந்தித்தேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தேன். நீட் விலக்கு கேட்ட போது பிரதமர் மோடி சில விளக்கங்களை அளித்தார்: நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பிரதமரிடம் தெரிவித்தேன். கேலோ இந்தியா போட்டியை தமிழ்நாட்டில் நடத்த வாய்ப்பை தருமாறு பிரதமரை கேட்டுக் கொண்டேன். மாவட்டந்தோறும் … Read more

ஜம்மு-காஷ்மீரில் ஜியோ 5-ஜி சேவை துவக்கம்| Jio 5-G service launch in Jammu and Kashmir

ஸ்ரீநகர்: ஜம்மு -காஷ்மீரில் 5 ஜி சேவையை துணை நிலை கவர்னர் இன்று துவக்கி வைத்தார். இந்தியாவில் 5ஜி சேவை கடந்தாண்டு அக்டோபரில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.பல்வேறு பெருநகரங்களில் 5-ஜி சேவையை ஜியோ, ஏர்டெல் அகிய தொலை தொடர்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றனர்.இந்நிலையில் இன்று ஜம்மு-காஷ்மீரில் ஜியோ 5ஜிசேவையை துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா கவர்னர் மாளிகையில் துவக்கி வைத்தார். இதன் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு பல்வேறு பயன்பாட்டிற்கு அதிவிரைவு இணைய சேவை கிடைக்கும் என … Read more