டெல்லி அமைச்சர்கள் மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ராஜினாமா

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் தங்கள் அமைச்சர் பதவிகளை ராஜிமானா செய்துள்ளனர். மதுபான ஊழல் வழக்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, திங்கள்கிழமை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவரை 5 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தனது பதவியை ராஜினமா செய்துள்ளார். இதேபோல், பண மோசடி வழக்கில் … Read more

“எங்கள் தலைவர் நித்தியானந்தா துன்புறுத்தப்படுகிறார்” – ஐ.நா. கூட்டத்தில் ‘கைலாசா’ பெண் பிரதிநிதி பேச்சு

ஜெனிவா: ஐ.நா. சபைக் கூட்டத்தில் நித்தியானந்தாவின் ‘கைலாசா’ பிரதிநிதி கலந்துகொண்டது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவில் நித்தியானந்தா மீது கடத்தல், குழந்தைகளைச் சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கைது நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். தப்பிச் சென்ற நித்யானந்தா மத்திய ஈக்வடாரில் தீவு ஒன்றை வாங்கி அதற்கு கைலாச நாடு என்ற பெயரிட்டு அதற்கான கொடியையும் வெளியிட்டதாக தகவல் வெளியானது. அந்த நாடு … Read more

கல்வியில் முதலீடு செய்யும் ஸ்டாலின்: நூறாண்டு வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம்!

தமிழ்நாட்டை நோக்கி இந்தி பேசும் வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வேலைக்காக படையெடுக்கின்றனர். தங்கள் மாநிலங்களில் வேலைவாய்ப்பு இல்லை, கல்வி இல்லை, வருமானம் இல்லை என்று புலம்புகின்றனர். மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டை பாரபட்சத்தோடு தான் நடத்தி வந்தனர் மத்தியில் ஆள்பவர்கள். பிற மாநிலங்களுக்கு கொடுத்தது போக மீதியை கொடுத்து வந்த போதும் அந்த மாநிலங்களை விட தமிழ்நாடு இன்று கல்வி, வேலைவாய்ப்பு, தனிநபர் வருமானம், தொழில் மேம்பாடு ஆகியவற்றில் முன்னணியில் உள்ளது. இந்த வளர்ச்சி எப்படி … Read more

Thangalaan: கேஜிஎஃப்பில் விக்ரமின் 'தங்கலான்' படக்குழு: வெளியான மரண மாஸ் தகவல்.!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் பா. ரஞ்சித். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் தனிக்கவனம் பெறும். ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக ‘நட்சத்திரம் நகர்கிறது’ படம் வெளியானது. இந்நிலையில் தற்போது விக்ரம் நடிப்பில் ‘தங்கலான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். பா. ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் துஷ்ரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், கலையரசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்ற ஆர்யாவின் ‘சார்பட்டா … Read more

கைதான 2 அமைச்சர்களும் ராஜினாமா… நெருக்கடியில் ஆம் ஆத்மி அரசு – இனி என்னவாகும்?

Two AAP Ministers Resigns: டெல்லியை ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சி இக்கட்டான சூழலில் இருந்து வருகிறது. குறிப்பாக, நேற்று முன்தினம் டெல்லி துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியா, மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.  மனீஷ் சிசோடியா, டெல்லி முதலமைச்சராக மட்டுமின்றி கல்வி, நிதி, கலால் போன்ற முக்கிய துறைகளின் அமைச்சராகவும் செயல்பட்டார். எனவே, அவரின் கைது ஆம் ஆத்மி கட்சியினரை கொந்தளிப்பில் ஆழ்த்தியது. அவர்கள் … Read more

OTT Release: நெட்ஃபிளிக்ஸில் மார்ச் மாத ரிலீஸ் படங்கள் தொடர்கள்!

Netflix On March 1st: நெட்ஃபிலிக்ஸ் ஸ்ட்ரீமிங் சேவை அதன் வரலாற்றில் முதல் முறையாக ஒரு நேரடி திட்டத்தை அறிமுகப்படுத்துவதால், நெட்ஃபிக்ஸ்க்கு மாதம் பெரியதாக இருக்கும். நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் நாளை முதல் ஒளிபரப்பவிருக்கும் நிகழ்ச்சிகளின் பட்டியல் இது. மார்ச் 2023 இல் நெட்ஃபிலிக்ஸில் என்ன வரப்போகிறது என்பதன் முழு பட்டியல் பிக் டாடி (1999) – ஆடம் சாண்ட்லர் நகைச்சுவை, அவரது தொழில் வாழ்க்கையின் உச்சக் கதாபாத்திரமான ஸ்கூபா ஸ்டீவ். Burlesque (2010) – ஸ்டீவ் ஆன்டின் செர் நடித்த இந்த இசையை … Read more

திருப்பதியில் தங்கும் அறைகளை பதிவு செய்வதில் புதிய நடைமுறை..!

திருப்பதி மலையில் தங்கும் அறைகள் ஒதுக்கீடு செய்வதில் இடைத்தரகர்கள் தலையீட்டைத் தடுக்க இன்று முதல் புதிய நடைமுறையை தேவஸ்தான நிர்வாகம் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கொண்டு வந்துள்ளது. அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு உரிய ரசீதுகளை பக்தர்கள் வாங்கும்போது பேஸ் ஐடென்டிஃபிகேஷன் டெக்னாலஜி மூலம் பக்தர்களின் முகம் அங்குள்ள வெப்கேம் மூலம் படம் பிடிக்கப்பட்டு தேவஸ்தான சர்வரில் சேமித்து வைக்கப்படும். அறைகளை காலி செய்யும் போதும் அதே பக்தர் கவுண்டருக்கு நேரடியாக சென்று அறைகளை காலி செய்ய வேண்டும். … Read more

மாநில கேபினட் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும்! பஞ்சாப் மாநில வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து…

டெல்லி: மாநில அமைச்சர்கள் கவுன்சிலின் உதவி மற்றும் ஆலோசனைகளுக்கு அவர் கட்டுப்பட்டதால், பட்ஜெட் அமர்வைக் கூட்டலாமா என்பது குறித்து ஆளுநரால் சட்ட ஆலோசனையைப் பெற முடியாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. மாநில ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு உட்பட்டவர் என  மீண்டும் தெளிவு படுதிதி உள்ளது. இந்த விவகாரத்தில் மாநில ஆளுநர் மற்றும் முதல்வரின் நடவடிக்கைகளையும் கடுமையாக விமர்சனம் செய்தது. மார்ச் 3ஆம் தேதி காலை 10மணிக்கு மாநில சட்டமன்றத்தின் பட்ஜெட் அமர்வை பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் … Read more

காதலித்து திருமணம் செய்த வாலிபர் ஏமாற்றியதால் டிக்டாக் திருநங்கை தற்கொலை முயற்சி

சேலம்: காதலித்து திருமணம் செய்து கொண்ட வாலிபர் ஏமாற்றியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததால், மனமுடைந்து போன டிக்டாக்கில் பிரபலமான திருநங்கை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரேயா (25). திருநங்கையான இவர் டிக்டாக் செய்து வருகிறார். இவர் நேற்று அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரையை தின்று தற்கொலைக்கு முயன்றார். மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த தகவலின் … Read more

திருச்சி லால்குடி அடுத்த அன்பில் என்ற பகுதியில் 144 தடை

திருச்சி: லால்குடி அடுத்த அன்பில் என்ற பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். ஆசிரமவள்ளி அம்மன் கோயில் விழா தொடர்பான இரு தரப்பு பிரச்சனையால் போராட்டம் நடக்க உள்ளதாக தகவல் வெளியானது. போராட்டம் நடக்க உள்ளதாக வந்த தகவலை அடுத்து பாதுகாப்பு கருதி கோட்டாட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.