60 ஆண்டுகளுக்கு பிறகு லோகோ- வை மாற்றிய நோக்கியா!

ஸ்மார்ட்போன்களின் வருகைக்கு முன்பு அனைவரையும் நோக்கியா நிறுவனமே, ஆக்கிரமித்து இருந்தது. ஆண்ட்ராய்டு மொபைல்களின் ஆதிக்கத்தில் நோக்கியா நிறுவனம் பின் தங்கியது. தற்போது புதுப்புது மாடல்களில் மொபைல் ஃபோன்களை வெளியிட்டு வரும் நோக்கியா நிறுவனம், தங்கள் லோகோவை மாற்றியுள்ளது. 60 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்ட்ராய்டு உலகிற்கு ஏற்ப, முதன் முறையாக நோக்கியா நிறுவனம் லோகோவை மாற்றியுள்ளது. பழைய லோகோவின் நீல நிறத்திற்கு பதிலாக, வெள்ளை நிறத்திலும், எழுத்து வடிவங்களிலும் மாற்றங்களைக் கொண்டு, புதிய நோக்கியா லோகோ வெளியிடப்பட்டுள்ளது. நோக்கியா … Read more

கடல் உணவு ஏற்றுமதியில் இந்தியா 4- வது இடத்தில் இருக்கிறது!

வெள்ளை இறால் மரபணு மேம்பாட்டு திட்டம், மீன் நோய்களுக்கான தேசிய கண்காணிப்பு திட்டம், மீன் வளர்ப்பு காப்பீடு திட்டம் ஆகிய மூன்று திட்டங்களை சென்னை எம்.ஆர்.சி., நகரில் உள்ள மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி மையத்தில், மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தொடங்கி வைத்தார். மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிலையத்தில் நடைபெற்ற துவக்க விழாவில் மத்திய கால்நடை, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், மத்திய மீன்வளத்துறை … Read more

மதச்சார்பற்ற கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் தேர்வில் பிரச்சினை இல்லை: டி.ராஜா கருத்து

புதுச்சேரி: “வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்படுவதே முக்கியம். ஆகவே, மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சிகள் ஒருங்கிணைவது அவசியம். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகே பிரதமர் யார் என்பதை முடிவு செய்யலாம்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலர் டி.ராஜா தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு, நிர்வாகக்குழு கூட்டங்கள் கடந்த 25-ல் தொடங்கி நடந்தது. இன்று தேசியக்குழுக் கூட்டம் நடந்து முடிந்தது. அதன்பிறகு அக்கட்சியின் தேசிய பொதுச்செயலர் டி. ராஜா, செய்தியாளர்களிடம் கூறியதாவது: பணப் … Read more

சென்னை – பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலை – போலி ஆவணங்களுக்கு இழப்பீடு: விரைவில் குற்றப் பத்திரிக்கை!

சென்னை – பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்திய விவகாரத்தில் போலி ஆவணங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது தொடர்பான வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறை தெரிவித்துள்ளது. போலி ஆவணங்களுக்கு இழப்பீடு வழங்கிய விவகாரம்! சென்னை – பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டபோது, நிலங்களுக்கு போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு 20 கோடியே 52 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிய அதிகாரிகள் … Read more

Priya Bhavanishankar:பிரேக்கப்பாகிடுச்சுனா ப்ரியா பவானிசங்கர் ஏன் இப்படியொரு வீடியோ போட்டிருக்கார்?

Priya Bhavanishankar, Rajvel: காதல் தோல்வியில் இருந்திருந்தால் ப்ரியா பவானிசங்கர் ஏன் இப்படியொரு வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடப் போகிறார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ப்ரியா பவானிசங்கர்சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து வெற்றிகரமான நடிகையான இருப்பவர் ப்ரியா பவானிசங்கர். சின்னத்திரையில் இருந்தபோதே ப்ரியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் கிடைத்துவிட்டார்கள். பார்க்க பக்கத்து வீட்டு பெண் போன்று இருக்கும் ப்ரியா பவானிசங்கர் என்றால் ரசிகர்களுக்கு ரொம்ப இஷ்டம். அவர் கல்லூரியில் படித்தபோதில் இருந்தே ராஜ்வேல் என்பவரை … Read more

Apple iphone 15 Ultra போனில் பட்டன்களே இருக்காது! வெளியில் கசிந்த புது டிசைன்

உலகளவில் இந்த ஆண்டு வெளியாகப்போகும் ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 15 மாடலில் எந்த ஒரு நேரடி பட்டன் வசதிகளும் இல்லாத டிசைன் இடம்பெறும் என்று தெரிகிறது. பட்டனுக்கு பதிலாக Haptic Feedback மூலமாகவே நாம் அனைத்து கட்டுப்பாடுகளையும் மேற்கொள்ளும் வகையில் அது உருவாக்கப்படும். தற்போது இருக்கும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலை விட இந்த ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் அதிக அகலம் கொண்டதாக இருக்கும். இதில் முதல் முறையாக USB Type C போர்ட் … Read more

இனி குடியுரிமை உறுதிமொழி செய்ய நீதிமன்றம் செல்ல தேவையில்லை! புதிய திட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

கடனாவில் ஜூன் மாதத்திலிருந்து புதிதாக குடியுரிமை உறுதிமொழி செய்பவர்கள் நீதிமன்றம் செல்லாமலே இணையத்தின் மூலம் செய்யலாம் என புதிய திட்டத்தை அரசு அறிவித்ததற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நீதிமன்றம் செல்ல தேவையில்லை கனடா நாட்டில் புதிதாக குடியுரிமை பெறும் குடிமக்கள் அதற்கான உறுதிமொழியை இணையம் மூலமே செய்து கொள்ளலாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.முன்னர் குடியுரிமை பெற நீதிமன்றத்திற்குச் சென்று நீதிபதியின் முன்னிலையில் குடியுரிமை பெற வேண்டியிருக்கும். அதனால் குடியுரிமை பெறுவதற்கான கால அவகாசம் அதிகமாவதால் எளிதில் … Read more

மார்ச் 20ந்தேதி பட்ஜெட் தாக்கல் – மார்ச் 2ந்தேதி கருத்துக்கேட்பு கூட்டம்! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழக நிதிநிலை அறிக்கை மார்ச் மாதம் 20ந்தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ள நிலையில், மார்ச் 2ந்தேதி நிதிநிலை  தொடர்பாக இறுதிக்கட்ட கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மார்ச் 4ந்தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தமிழக அரசின் 2023-2024 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்துள்ளார். தமிழக அரசு கடந்த … Read more

ஆரோவில் 55வது ஆண்டுவிழாவையொட்டி ஆரோவில் வாசிகள், வெளிநாட்டினர் அதிகாலை நெருப்புமூட்டி தியானம்

விழுப்புரம்: ஆரோவில் சர்வதேச நகரம் தொடங்கப்பட்ட தினமான இன்று அதிகாலை ஆரோவில்வாசிகள், வெளிநாட்டினர் அங்குள்ள திறந்தவெளி கலையரங்கில் நெருப்புமூட்டி தியானத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி அருகே உள்ள தமிழக பகுதியான (விழுப்புரம் மாவட்டம்) வானூர் அருகே உள்ள ஆரோவில் சர்வதேச நகரம் மகான் அரவிந்தரின் சீடரான ஸ்ரீஅன்னையின் கனவு நகரமாக 1968ம் ஆண்டு பிப்ரவரி 28ம்தேதி தொடங்கப்பட்டது. எந்த ஒரு நாட்டினருக்கும் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள முடியாத ஒரு பொதுஇடமாக அனைத்து மதத்தினரும் கொண்டாடும் வகையில் அமைய வேண்டும் … Read more