வாணியம்பாடி சாலை விபத்தில் உயிரிழந்த பள்ளி மாணவர்கள் 3 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம்: முதல்வர் உத்தரவு

சென்னை: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சாலை விபத்தில் பலியான 3 அரசுப் பள்ளி மாணவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், வளையாம்பட்டு கிராமம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிரிசமுத்திரம் அரசுப் பள்ளிக்கு செவ்வாய்க்கிழமை காலை சைக்கிளில் சென்று … Read more

உணவுப் பஞ்சத்தில் தவிக்கும் வட கொரியா: விவசாயத்தில் மாற்றம் கொண்டுவர கிம் தீவிரம்

பியாங்யாங்: வட கொரியாவில் உணவுப் பற்றாக்குறை நிலவுவதை தொடர்ந்து, விவசாய உற்பத்தியில் தீவிர மாற்றத்திற்கு அந்நாட்டு அதிபர் கிம் அழைப்பு விடுத்துள்ளார். வட கொரியா தனது உள்நாட்டு விஷயங்கள் அனைத்தையுமே ராணுவ ரகசியம் போல் பாதுகாக்கும். அங்கு என்ன நடக்கிறது என்ற உண்மை நிலையை உலக நாடுகள் அவ்வளவு எளிதில் அறிந்துகொள்ள முடியாது. ஊடகங்களும் அரசுக் கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன. கரோனா பெருந்தொற்று உலகையே ஆட்டிப்படைக்கும்போதும் கூட அங்குள்ள தொற்று நிலவரம் குறித்து உண்மையான விவரம் உலகுக்குத் தெரிவதில்லை. … Read more

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஒன்பிளஸ் 11R 5ஜி ஸ்மார்ட்போன்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் 11R 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். இந்த போனுக்கு அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 7-ம் தேதி இந்த போன் அறிமுகமானது. சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013 வாக்கில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இப்போது ஒன்பிளஸ் 11R 5ஜி … Read more

முதல்வர் ஸ்டாலின் பாணி இது தான்: மக்களின் முதல்வராக உயர்ந்த பின்னணி!

ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி, மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஆட்சிக்கு வந்த பின்னர் ஆட்சியாளர்கள் மக்கள் பக்கம் நிற்கிறார்களா, இல்லையா என்பதை பொறுத்து தான் ஒரு அரசு எப்படிபட்டது என்பதை கூற முடியும். மக்களை வாக்காளர்களாக மட்டுமே கருதியிருந்தால் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட காலத்தில் இவ்வளவு பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்காது. அண்ணாவின் தம்பி மு.க.ஸ்டாலின் ‘மக்களிடம் செல், மக்களோடு மக்களாக சேர்ந்து வாழ், மக்களுக்கு பணியாற்று’ என்பது பேரறிஞர் அண்ணா தனது தம்பிகளுக்கு சொன்னது. அண்ணாவின் வார்த்தைகளை தனது … Read more

Samantha: சமந்தாவின் டீன்ஏஜ் போட்டோ!… 13 வயசுலேயே அவ்ளோ அழகு…

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழில் சிம்பு த்ரிஷா நடிப்பில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை சமந்தா, தெலுங்கில் வெளியான அப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து வரும் சமந்தா முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்து வருகிறார். Ajith: அஜித் என்னை 10 நிமிடம் கட்டிப்பிடித்தார்… நெகிழ்ந்துப் போன பிரபலம்! தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து … Read more

Samantha: படப்படிப்பில் காயம்… ஆக்‌ஷனை குறைக்காத சமந்தா – வியக்கும் ரசிகர்கள்!

ஹாலிவுட்டில் மிகவும் தற்போது பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் வெப்-சீரிஸ் என்றால், அது ருஸ்ஸோ பிரதர்ஸ் உருவாக்கத்தில் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருக்கும்,  ‘Citadel’ சீரிஸ்தான். அமேசான் பிரைம் ஒரிஜனல் சீரிஸான இதன் முதல் சீசனின் ஆறு எபிசோட்கள் ஏப்ரல் மாதத்தில் வெளியாக உள்ளது. இதில், நடிகை பிரியங்கா சோப்ரா, ரிச்சர்ட் மேடன் ஆகியோர் இந்த ஆங்கில வெப்-சீரிஸில் நடித்துள்ளனர்.  ‘Citadel’ சீரிஸின் இந்தி வெர்ஷனும் தற்போது பாலிவுட்டில் தயாராகி வருகிறது. இதையும், அமேசான் பிரைம் … Read more

சவால்கள், சாதனைகள் என படிப்படியாக உயர்ந்தவர் முக ஸ்டாலின்: கமல்ஹாசன்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்த நாளையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் புகைப்பட கண்காட்சியை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திறந்து வைத்தார். “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 ஆண்டு பயணம் பற்றி புகைப்படக் கண்காட்சி தொடக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்பட கண்காட்சி 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் … Read more

துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலியான நிலையில் 69 பேர் காயம்

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துருக்கி மற்றும் சிரியா நாடுகளை மையமாகக் கொண்டு கடந்த 6ம் தேதியன்று ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தால் இருநாடுகளும் பெரும் சேதத்தை சந்தித்தன. இதுவரை இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல ஆயிரம் மக்கள் தங்களை வீடுகளை இழந்துள்ளனர். தற்போது மீட்புப் பணிகள் முடிந்து புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், துருக்கியின் மாலத்யா மாகாணத்தில் ஏற்பட்ட 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் … Read more

ஆயிரக்கணக்கான புலம்பெயர் மக்களை திருப்பி அனுப்பிய நபர்… நாடுகடத்தப்படும் சூழலில் அவரே சிக்கியது அம்பலம்

அமெரிக்காவின் டெக்சாஸ் எல்லையில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் மக்களை திருப்பி அனுப்பிய அதிகாரி ஒருவர், தாமும் ஒரு ஆவணமற்ற புலம்பெயர் நபர் என்பதை உறுதி செய்யப்பட்டதில் அதிர்ந்து போயுள்ளார். அம்பலமாகியுள்ள பிண்ணனி அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைய முற்படும் மக்களை கண்காணித்து வெளியேற்றும் பணியில் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் பலர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் வாகனங்களிலும் ஹெலிகொப்டர்களிலும், தற்போது ட்ரோன் மூலமாகவும் எல்லைகளில் அத்துமீறும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். @getty ரால் ரோட்ரிக்ஸ் என்பவர் அமெரிக்க கடற்படையின் ராணுவ பொலிஸ் படையில் … Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வீடியோ மூலம் பிறந்தநாள் வாழ்த்து! வீடியோ

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வீடியோ மூலம் அட்வான்சாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மார்ச் 1ந்தேதி (நாளை) பிறந்தநாள் கொண்டாடும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்றே வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, திமுகவினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளார். நாளை மாலை, பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.  இதையொட்டி பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளை பகிர்ந்து வருகிறார்கள். அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் … Read more