அடுத்த போட்டியில் சூர்யகுமாரின் நிலைமை என்ன? சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு தரலாம்! முன்னாள் வீரர் கருத்து


வரும் போட்டிகளில் சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இடம் தரலாம், அது தவறான வாய்ப்பாக அமையாது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து சொதப்பும் சூர்ய குமார்

இந்திய அணி தற்போது அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

அடுத்த போட்டியில் சூர்யகுமாரின் நிலைமை என்ன? சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு தரலாம்! முன்னாள் வீரர் கருத்து | Suriyakumar Place Is Doubt In 3Odi Sanju Samsoncricbuzz

இந்த போட்டியில் இந்திய அணி வெறும் 26 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது. இது இந்திய அணியின் மிக மோசமான ஆட்டமாக வரலாற்றில் பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டில் சிறப்பாக விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ், தற்போது கடந்த சில போட்டிகளாக தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

நடந்து முடிந்துள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் முதல் பந்திலேயே வெளியேறி அதிர்ச்சியை வழங்கினார்.

அடுத்த போட்டியில் சூர்யகுமாரின் நிலைமை என்ன? சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு தரலாம்! முன்னாள் வீரர் கருத்து | Suriyakumar Place Is Doubt In 3Odi Sanju Samson


சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு

இந்நிலையில், அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சூர்யகுமார் யாதவ்-க்கு இடம் அளிக்கப்படுமா என்று பார்க்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கருத்து தெரிவித்துள்ளார்.

அதே சமயம், இந்திய அணியில்  சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு தரலாம், அது தவறான முடிவாக அமையாது என தெரிவித்துள்ளார்.

அத்துடன் சஞ்சு சாம்சன் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்த போது எல்லாம் சிறப்பாக விளையாடியுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

அடுத்த போட்டியில் சூர்யகுமாரின் நிலைமை என்ன? சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு தரலாம்! முன்னாள் வீரர் கருத்து | Suriyakumar Place Is Doubt In 3Odi Sanju SamsonAFP



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.