மண்ணுக்கு அடியில் சிலை இருப்பதாக கூறி சாமியாடி 15 அடி வரை பள்ளம் தோண்டிய பூசாரி..

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சாமியாடி மண்ணுக்கு அடியில் சிலை இருப்பதாக கூறி 15அடி வரை பள்ளம் தோண்டப்பட்டதை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி மூடினர்.

வி.ஆண்டிக்குப்பத்தைச் சேர்ந்த சம்பந்தமூர்த்தி மொரிசியஸ் நாட்டில் உள்ள சிவன் கோவிலில் பூசாரி ஆக பணியாற்றி வந்துள்ளார்.

இவர் தனது இடத்தில் வீடு கட்டுவதற்கான பூமி பூஜைகளை செய்த போது திடீரென சாமி வந்து ஆடியுள்ளார். அப்போது இந்த இடத்தில் சாமி சிலை இருப்பதாகவும் இங்கு வீடு கட்ட வேண்டாம் சிலையை எடுத்து வைத்து வழிபடு என சாமி கூறியதாக தெரிவித்து சுமார் 15 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டி உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வருவாய்த்துறை மற்றும் பண்ருட்டி காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த பண்ருட்டி வட்டாட்சியர் மற்றும் போலீசார் விரைந்து வந்து அந்த பள்ளத்தை மண்ணைக் கொண்டு மூடினர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.