Vanangaan: வணங்கான் படப்பிடிப்பில் ஏற்பட்ட மோதல்..அடிதடி வரை சென்றதால் போலீஸில் புகார்..!

முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வரும் பாலா சமீபகாலமாக படங்கள் இயக்காமல் இருந்து வந்தார். வர்மா படத்தின் பிரச்சனைக்கு பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த பாலாவிற்கு வணங்கான் படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார் சூர்யா.

2D நிறுவனம் சார்பாக சூர்யாவே வணங்கான் படத்தை தயாரித்தார். தன்னை ஒரு நடிகராக தமிழ் சினிமாவில் முன்னிறுத்திய பாலாவிற்கு சூர்யா இதன் மூலம் நன்றி கடன் செலுத்துவதாக பேசப்பட்டு வந்தது. ஆனால் படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களிலேயே சூர்யாவிற்கும், பாலாவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

Vijay: விஜய்யிடம் கமல் நடந்துகொண்ட விதம்..உச்சகட்ட வருத்தத்தில் தளபதி..!

இதன் காரணமாக படப்பிடிப்பும் பாதிலேயே நிறுத்தப்பட்டது. இதன் பிறகு வணங்கான் இப்போ துவங்கும் அப்போ துவங்கும் என சொல்லிவந்தனர் படக்குழுவினர். ஆனால் படம் துவங்குவதற்காக அறிகுறியே தெரியவில்லை. இதையடுத்து சில மாதங்களுக்கு முன்னர் வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகுவதாக பாலவே அறிவித்தார்.

இது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக மாறியது. மேலும் சூர்யா நல்ல முடிவை எடுத்துள்ளார் எனவும் சிலர் கூறி வந்தனர். இந்நிலையில் சூர்யா இல்லை என்றால் என்ன வணங்கான் படத்தை எடுத்தே தீருவேன் என அருண் விஜய்யை வைத்து படத்தை எடுத்து வருகின்றார் பாலா.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வருகின்றது. இதைத்தொடர்ந்து இப்படப்பிடிப்பில் ஒரு நடிகை தாக்கப்பட்டதாகவும், அந்த நடிகை போலீசில் புகார் கொடுத்துள்ளதாகவும் ஒரு தகவல் வந்துள்ளது.

அதாவது வணங்கான் படத்தில் துணை நடிகையாக நடிப்பதற்காக சில நடிகைகளை கேரளாவில் இருந்து ஜிதின் என்ற ஒருங்கிணைப்பாளர் அழைத்து வந்துள்ளார். ஷூட்டிங் முடிந்த பிறகு பேசிய சம்பளத்தை ஜிதின் கொடுக்காததால் லிண்டா என்ற பெண் பேசிய சம்பளத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

இதையடுத்து ஜிதின் லிண்டாவை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இதனால் லிண்டாவிற்கு படு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து லிண்டா ஜிதின் மீது போலீசில் புகாரளித்துள்ளார். இந்த விஷயத்தால் வணங்கான் படப்பிடிப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.