விழுப்புரம் : படிக்க சொல்லி தாய் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி தற்கொலை..!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி அருகே ஆவுடையார்பட்டு அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர்கள் குமரன்-சரளா தம்பதியினர் . இவருடைய மகள் கயல்விழி. இவர் திருக்கனுாரில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், கயல்விழி தற்போது நடைபெற்று வரும் பொது தேர்வில் மூன்று தேர்வுகளை எழுதி உள்ளார். அடுத்தடுத்த தேர்வுக்கு ஆயத்தமாகி வரும் இவர் நேற்று தேர்வு இல்லாததால் வீட்டில் இருந்துள்ளார். 

அப்போது அவருடைய தாயார் ஏன் மற்ற தேர்வுக்கு படிக்கவில்லை? என்று கேட்டு கயல்விழியை திட்டியுள்ளார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான கயல்விழி நேற்று பிற்பகல் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து துாக்கு போட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கதறி அழுதுள்ளனர். இந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மயங்கிய நிலையில் இருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு அவருக்குச் சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று மாலை கயல்விழி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக தகவலறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.