”பாஜக வளர வளர எதிர்க்கட்சியினரின் தாக்குதல் அதிகரிக்கும், ஆதலால் வலுவான எதிர்தாக்குதலுக்கு தயாராக வேண்டும்..” – பிரதமர் மோடி..!

பாஜகவின் செல்வாக்கு அதிகரிக்கும் நேரத்தில், எதிர்க்கட்சிகளின் விமர்சனமும் அதிகமாக இருக்குமென்றும், ஆதலால் வலுவான எதிர்தாக்குதலுக்கு தயாராக இருக்க வேண்டுமென்று பாஜக தலைவர்களை பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு, அண்மையில் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் பாஜகவுக்கு வெற்றி பெற்று தந்ததற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பேசிய பிரதமர் மோடி, மத்தியில் பாஜக ஆட்சியமைத்து 9 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், பாஜக எம்பிக்கள் அனைவரும் தங்களது தொகுதிகளில் மே மாதம் 15ம் தேதி முதல் ஜூன் மாதம் 15ம் தேதி வரை சுற்றுப்பயணம் செய்ய வேண்டுமென்றும், தங்களது தொகுதி மக்களை சந்தித்து, கட்சிக்கு பிரசாரம் செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டதாக மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.