பன்றிக்காய்ச்சலால் பன்றி உயிரிழந்ததை தொடர்ந்து பண்ணையில் இருந்த அனைத்து பன்றிகளும் அழிக்கப்பட்டு குழியில் புதைப்பு..!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சலால் பன்றி உயிரிழந்ததை தொடர்ந்து பண்ணையில் இருந்த அனைத்து பன்றிகளும் அழிக்கப்பட்டன.

கல்லாங்குளம் பகுதியை சேர்ந்த ராஜாமணி என்பவரின் பண்ணையில் இருந்த பன்றி ஒன்று சில தினங்களுக்கு முன்பு இறந்து கிடந்ததால் கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பன்றியின் உடல், ஆய்வுக்காக சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதில், இறந்த பன்றிக்கு ஆப்பிரிக்க காய்ச்சல் இருந்தது பரிசோதனையில் தெரியவந்தது.

இதனையடுத்து பண்ணையை சுற்றி ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக ஆட்சியர் ஸ்ரேயா அறிவித்தார்.

பண்ணையில் உள்ள 20-க்கும் மேற்பட்ட பன்றிகளை அழிக்க கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டதை அடுத்து பன்றிகள் கொல்லப்பட்டு குழிதோண்டி புதைக்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.