“எல்லோரும் சமம் என்பதைத் தெரியப்படுத்துவதுதான் திரையரங்குகள்!" – நடிகர் சூரி

தான் கதாநாயகனாக நடித்து இன்று வெளியான விடுதலை -1 திரைப்படத்தை சொந்த ஊரான மதுரையிலுள்ள திரையரங்கில் ரசிகர்களோடு அமர்ந்து கண்டு ரசித்தார் நடிகர் சூரி.

நடிகர் சூரி

அதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசியவர், “விடுதலை திரைப்படம் ஏன் தாமதம் என்று பொதுமக்கள் காரணம் கேட்டனர். ஆனால், இவ்வளவு தாமதத்தினால்தான் நல்ல படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

விடுதலை திரைப்படத்தை தயாரிப்பாளர்களும் ரசிகர்களும் வெகுவாக கொண்டாடி வருகிறார்கள். எனது குலசாமி சங்கையாவைக் கும்பிட்டு விட்டு திரைப்படம் பார்க்க வந்திருக்கிறேன்.

விடுதலை| நடிகர் சூரி

நல்ல திரைப்படத்தை மக்கள் வெற்றி பெற வைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.எந்த திரைப்படத்தையும் வெற்றிப்படமாக கொண்டு செல்வது ரசிகர்கள்தான்.

தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் திரைப்படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பதை விட வேறு என்ன பெருமை இருக்கிறது ?இந்தப் படத்திற்காக யாருக்கு தேசிய விருது கிடைத்தாலும் அது எனக்கு கிடைத்தது போன்ற மகிழ்ச்சியைத் தரும்.மிகப்பெரிய நடிகர் விஜய் சேதுபதியோடு நடித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

திரையரங்கில் சூரிக்கு வரவேற்ய்

இத்திரைப்படத்திற்காக ஒவ்வொரு கலைஞர்களும் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

ரோகினி திரையரங்கில் பழங்குடி மக்களுக்கு அனுமதி மறுப்பு சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த சூரி, “எல்லோரும் சமம், எல்லோரும் ஒன்றுதான் என்பதை தெரியப்படுத்தத்தான் திரையரங்குகள் வந்தது. நீ நான் என்ற வேறுபாடு திரையரங்கிற்கு கிடையாது. இந்த சம்பவத்திற்கு நான் வருத்தப்படுகிறேன். எந்த சூழலில் அப்படி நடந்தது என்று தெரியவில்லை. திரையரங்கில் அனைவருக்கும் சம உரிமை உள்ளது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.