கால்கள் கட்டப்பட்ட நிலையில் விவசாய கிணற்றில் சாக்குமூட்டையில் இளம்பெண் சடலமாக மீட்பு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே விவசாய கிணற்றில் சாக்குமூட்டையில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் கல்லூரி மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பங்களாப்புதூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் அந்த பெண் , நாய்க்கன்காட்டைச் சேர்ந்த ஸ்வேதா என்பதும் கோபி கலை கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்ததும் தெரிய வந்தது. கடந்த 28-ந்தேதி கல்லூரிக்கு சென்ற இவர் வீடு திரும்பாததால் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதும் தெரிய வந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.