பிரிட்ஜ் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி காவல் ஆய்வாளர் உட்பட இருவர் பலி..!

கோயம்புத்தூர் மாவட்டம் நல்லூரில், பிரிட்ஜ் வெடித்ததால் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், அவ்விபத்தில் சிக்கி காவல் ஆய்வாளர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். சென்னை அயனாவரம் காவல்நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றிய சபரிநாத் என்பவர், விடுதியில் தங்கி படித்துவரும் தனது மகனை காண, விடுப்பில் சொந்த ஊர் சென்றதாக கூறப்படுகிறது. இன்று காலை வீட்டில் அவர் இருந்த போது, சமையல் செய்வதற்காக சாந்தி என்ற பெண் சென்ற நிலையில், பயங்கர சத்தம் ஏற்பட்டதாகவும், … Read more

இம்மாத இறுதிக்குள் குரூப் 4 தேர்வு முடிவு – #WeWantGroup4Results ட்ரெண்டிங்கை தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தமிழக அரசுத் துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 9,870 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 18 லட்சத்து 36,535 பேர் தேர்வெழுதினர். தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதற்கிடையே, அரசுப் பணிகளில் மகளிருக்கான … Read more

மதுப் பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்: தமிழ்நாட்டில் வரப்போகும் ‘தண்ணி’ தட்டுப்பாடு?

டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு மதுவகைகளை ஏற்றிச் செல்லும் வாகன ஒப்பந்ததாரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டில் மது வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. டாஸ்மாக் மதுபானக் கிடங்குகளிலிருந்து மதுவகைகளை ஏற்றிச் சென்று டாஸ்மாக் கடைகளுக்கு விநியோகிக்கும் பணிகளுக்கு டெண்டர் விடப்படும். யார் குறைவான தொகைக்கு கேட்கிறார்களோ அவர்களுக்கு டெண்டர் வழங்கப்படும். அவர்கள் தங்கள் வாகனங்களில் இந்த விநியோகப் பணியை மேற்கொள்வார்கள். ஆனால் இம்முறை வெளிப்படையாக டெண்டர் விடப்படாமல் அமைச்சர் ஒருவருக்கு வேண்டிய ஆள்களுக்கு இந்த … Read more

Bala health update: ஐசியூவில் நடிகர் பாலா.. இப்போ எப்படி இருக்கார்? முதல் முறையாக பேசிய மனைவி!

நடிகர் பாலாவின் உடல் நிலை குறித்து அவரது மனைவி முதல் முறையாக பேசியுள்ளார். நடிகர் பாலாபிரபல நடிகரான பாலா திடீர் உடல் நலக்குறைவால் பாதிப்பட்டுள்ளார். அவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதும் உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பாலாவின் உடல் நிலை மோசமடைந்ததால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ​ Dhanush: நான் நம்பின 3 பேரும் என்னை … Read more

Oscars 2023: ஆஸ்கார் விழா எப்போது, எங்கு, எதில் நேரலையில் பார்ப்பது? – முழு விவரம்!

Oscars 2023: உலகின் மிகவும் மதிப்புமிக்க திரைப்பட விருது நிகழ்ச்சிகளில் ஒன்றான ஆஸ்கார் 2023 விருது விழா இந்த வார கடைசியில் நடைபெற உள்ளது. 95ஆவது ஆஸ்கார் விருது விழா மார்ச் 12 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறகிறது. இந்நிகழ்வு உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட பிரதேசங்களில் நேரடி ஒளிப்பரப்பாக உள்ளது. பார்வையாளர்கள் ஆஸ்கார் 2023 விருது விழாவை எங்கு எப்போது பார்க்கலாம் என்ற முழு விவரத்தை இங்கே காணலாம்.  எப்போது, எங்கு பார்க்க வேண்டும்? … Read more

அரசு கேபிள் டிவி கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை! அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்…

சென்னை: அரசு கேபிள் டிவி கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை” என  அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சொத்துவரி, மின்கட்டணம் உள்பட பல்வேறு வரிகள் உயர்த்தப்பட்ட நிலையில்,  அரசு கேபிள் டிவி கட்டணமும் உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த நிலையில், இன்று, தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் துணை மேலாளர்கள் மற்றும் டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்களின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்றது.  … Read more

ரசாயன கலப்படமின்றி இயற்கை முறையில் காய்கறி சாகுபடி: மாடித் தோட்டம் அமைக்க மக்களிடையே அதிகரிக்கும் ஆர்வம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே பெண் ஒருவர் மாடியில் தோட்டம் அமைத்து இயற்கை உரமிட்டு காய்கறி, கீரை வகைகளை வளர்த்து வருகிறார். அனைத்தும் கலப்படமாகிவிட்ட இன்றைய சுழலில் நஞ்சற்ற காய்கறிகள், கீரைகள், பழங்களை உண்ண பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கு வடிகாலாக அமைந்துள்ளது. மாடித் தோட்டம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டி கிராமத்தை சேர்ந்த காயத்திரி வீட்டின் மாடியில் தோட்டம் அமைத்து காய்கறிகளை அறுவடை செய்து ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு வருகிறார். செவிலியர் … Read more

மலேசியா முன்னாள் பிரதமர் முஹ்யிதின் யாசின், ஊழல் தடுப்பு விசாரணை முகமையால் கைது

கோலாலம்பூர்: மலேசியா முன்னாள் பிரதமர் முஹ்யிதின் யாசின், ஊழல் தடுப்பு விசாரணை முகமையால் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனா நிவாரண திட்டப்பணிகளில் முறையான விதிகளை கடைபிடிக்கவில்லை என்பது அவர்மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு

சென்னை, மார்ச் 9: தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளார். துல்கர் சல்மான், ரிது வர்மா நடிப்பில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கியவர் தேசிங்கு பெரியசாமி. இந்த படத்துக்கு பிறகு, புதிய …

பெங்களூரு சர்ஜாபூர் சாலையில், உள்ள மெத்தை குடோனில் திடீர் தீ விபத்து; 3 கடைகள் எரிந்து நாசம்!

பெங்களூரு: பெங்களூரு சர்ஜாபூர் சாலையில், உள்ள மெத்தை குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் 3 கடைகள் எரிந்து நாசமாகின. மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.