Election Results 2023: நாளை வெளியாகும் 3 மாநில தேர்தல் முடிவுகள்..! எப்படி? எங்கு பார்ப்பது?

நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கான சட்டப் பேரவைகளுக்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி முடித்திருக்கிறது. திரிபுரா சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரி 16 ஆம் தேதியும், மேகாலயா மற்றும் நாகாலாந்து சட்டமன்றங்களுக்கான தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதியும் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து இந்த 3 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மார்ச் 2 ஆம் தேதியான நாளை வெளியாகிறது. பதிவான வாக்குகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணப்பட்டு முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்பட இருக்கின்றன.  … Read more

ஆறு ஆண்டுகள் முறையான ஆவணங்களின்றி சுற்றித்திரிந்த ஆசிய நாட்டவர் ஜேர்மனியில் கைது

ஆறு ஆண்டுகளாக, முறையான ஆவணங்களின்றி ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் சுற்றித்திரிந்த ஆசிய நாட்டவர் ஒருவர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜேர்மனிக்குள் நுழைய முயன்ற ஆசிய நாட்டவர் கடந்த ஞாயிறன்று, ரயில் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட வழக்கமான சோதனையின்போது, ஆஸ்திரியா நாட்டிலிருந்து சட்டவிரோதமாக ஜேர்மனிக்குள் நுழைய முயன்ற 37 வயதான ஆசிய நாட்டவர் ஒருவர், Lindau என்ற இடத்தில் பொலிசாரிடம் சிக்கினார். அவரிடம் முறையான பாஸ்போர்ட் இருந்தும், முறையான குடியிருப்பு அனுமதி இல்லை. 2017ஆம் ஆண்டு முதல், தொடர்ந்து ஆறு … Read more

விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமத்தில் கண்டெடுக்கப்பட்ட 41000 மாத்திரைகள்! அதிர்ச்சி தகவல்..!

சென்னை:  விழுப்புரத்தில் பல ஆண்டுகளாக அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்த அன்பு ஜோதி ஆசிரம விவகாரத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், அந்த ஆசிரமத்தில் மனநலம் சம்பந்தப்பட்ட 41ஆயிரம் மாத்திரைகள் உள்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக சிபிசிஐடி தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஜூபின் பேபி. இவர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் கடந்த 2004-ம் ஆண்டு அன்பு ஜோதி ஆசிரமத்தை தொடங்கி நடத்தி … Read more

பங்குனி பிரமோற்சவ விழா; திருவானைக்காவல் கோயிலில் கொடியேற்றம் கோலாகலம்: 23ம் தேதி தேரோட்டம்

திருச்சி: பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்குவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மண்டல பிரமோற்சவம் 48 நாட்கள் கொண்டாடப்படும். அதன்படி இந்தாண்டுக்கான விழா இன்று (புதன்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. கொடியேற்றத்தையொட்டி சுவாமி, அம்மன், விநாயகர், சோமஸ்கந்தர், பிரியாவிடை ஆகிய பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் காலை 7 மணி அளவில் கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரம் அருகே எழுந்தருளினர். கொடிமரத்திற்கு சிறப்பு … Read more

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தொடங்கியது

சென்னை: சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி சென்னையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

நடிகைக்கு ‘இன்ஃப்ளூயன்ஸா பி வைரஸ்’: வீட்டுத் தனிமையில் சிகிச்சை

புதுடெல்லி: இந்தி தொலைக்காட்சி நடிகை டெபினா பொன்னர்ஜி வெளியிட்டுள்ள பதிவில், ‘எனக்கு ‘இன்ஃப்ளூயன்ஸா பி வைரஸ்’ தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் நான் எனது குடும்பத்தை விட்டு விலகி உள்ளேன். எனது இரண்டு மகள்களான லியானா, திவிஷா ஆகியோர் நலமாக உள்ளனர். எனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பால், அவர்களை விட்டும் விலகி உள்ளேன். மருத்துவர்களின் ஆலோசனைபடி சிகிச்சை பெற்று வருகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். நடிகை டெபினா தொலைகாட்சி தொடர்களான ராமாயணம், சிடியா கர், சந்தோஷி மா, … Read more

4 விருதுகள் வென்ற 'கேங்'

இயக்குனர் 'சாட்டை' அன்பழகனிடம் உதவியாளராக இருந்த தீனதயாளன் இயக்கி உள்ள படம் 'கேங்'. இந்த படத்தில் வளர்ந்து வரும் நடிகர் குணா ஹீரோவாக நடித்துள்ளார், இவர் தீரன், இரும்புத்திரை, கே.டி, காளி, தமிழ் படம் 2, ஹீரோ, விக்ரம் சமீபத்தில் வெளியான தக்ஸ் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மும்பையை சேர்ந்த தாமினி தேவ் ஹீரோயினாக அறிமுகமாகிறார். டோனி பிரிட்டோ இசை அமைக்கிறார், பெருமாள் ஒளிப்பதிவு செய்கிறார். “கேங் ரேப்பில் ஈடுபடும் கும்பலிடம் மாட்டிக் கொள்ளும் … Read more

கிரீசில் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 32 பேர் பலி | 32 killed in Greece train head-on collision

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஏதென்ஸ்: கிரீசில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 32 பேர் உயிரிழந்தனர். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகரத்திற்கு இன்று(பிப்.,01) 350 பயணிகளுடன் ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது லரிசா நகரின் தெம்பி பகுதியில் ரயில் சென்றுக் கொண்டிருக்கும் போது, அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரயில் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதையடுத்து ரயிலின் சில … Read more

125கிமீ ரேஞ்ச்.., மேட்டர் ஏரா எலெக்ட்ரிக் பைக் ₹.1.44 லட்சத்தில் அறிமுகம்

இந்திய சந்தையில் முதன்முறையாக 4 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற எலெக்ட்ரிக் பைக் மாடலாக மேட்டர் எனெர்ஜி (Matter Energy) நிறுவனத்தின் Aera அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Aera பைக்கின் உண்மையான ரைட் ரேஞ்சு 125 கிமீ ஆக இருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏரா (Aera) இ-பைக்கில் Aera 4000, Aera 5000, Aera 5000+ மற்றும் Aera 6000 என மொத்தமாக 4 வேரியண்டுகள் இடம்பெற்றிருக்கின்றது. முதற்கட்டமாக Aera 5000 மற்றும் Aera 5000+ என இரண்டு … Read more