புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு புரளி :உ.பி.,யில் 4 மணி நேரம் ரயில் நிறுத்தம்| Purushottam Express train bomb hoax: Train halted for 4 hours in UP

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

லக்னோ: பூரி புதுடில்லி புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து உ.பி.யில் நான்கு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

latest tamil news

பூரி -புருஷோத்தம் இடையே இயங்கி வரும் புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடி குண்டுவைக்கப்பட்டு உள்ளது. இந்த வெடிகுண்டு ஜிங்குரா ஸ்டேஷன் அருகே ரயிலில் வெடி குண்டு வெடிக்கும் என உ.பி.,மாநிலம் டாக்மாக்பூர் ஸ்டேஷன் மாஸ்டருக்கு வாக்கிடாக்கியில் தகவல் கிடைத்தது.இதனையடுத்து எக்ஸ் பிரஸ் ரயில் மிர்சாபூர் சுனார் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டது.

latest tamil news

தொடர்ந்து வெடி குண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சோதனையிட்டனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் ரயில்வே போலீசார் இணைந்து நான்கு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர். முடிவில் அவை புரளி என தெரியவந்தது. சம்பவத்தின் போது தேடலில் வெடி குண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.