கல்லூரி மாணவர்கள் மாணவிகள் காதல் செய்ய விடுப்பு: சீனாவில் அதிரடி ஆபர்| China’s Colleges Give Students 7-Day Break ‘To Fall In Love’ As Birth Rate Plummets

பீஜிங்: சீனாவில் பிறப்பு விகிதம் சரிந்த நிலையில், காதல் செய்வதற்காக கல்லூரி மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுப்பு அளிக்கப்பட்டு உள்ளது. சீனாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மக்கள் தொகை சரியத் துவங்கியுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில், மிக மோசமான மக்கள் தொகை சரிவை நாடு சந்தித்து வருவதாக சீன அரசு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன் காரணமாக, வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில் சிரமம், நுகர்வோர் தேவையில் சுணக்கம், பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட சிக்கல்களில் சீனா சிக்கியுள்ளது. … Read more

Manikandan – கடைசி விவசாயி.. அந்த தாத்தாவின் குடும்பத்தை வேண்டுமென்றே புறக்கணிக்கிறாரா இயக்குநர் மணிகண்டன்?

சென்னை: Director Manikandan (இயக்குநர் மணிகண்டன்) கடைசி விவசாயி படத்தில் நடித்த நல்லாண்டி தாத்தாவின் குடும்பத்துடைய தற்போதைய நிலை தெரியவந்திருக்கிறது. காக்கா முட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மணிகண்டன். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை பூர்வீகமாகக் கொண்ட அவர் அடிப்படையில் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. களம் அமைத்து கொண்டு விண்ட் மணிகண்டன் 2010ஆம் ஆண்டு விண்ட் என்ற குறும்படத்தை இயக்கினார். அந்தப் படம் பரவலான வரவேற்பைப் பெற்றது. மேலும் அந்தப் படத்தை இயக்குநர் வெற்றிமாறன் ஏகத்துக்கும் புகழவும் … Read more

மூங்கில் காட்டில் உலவும் பாம்பு… 5 நொடிகளில் ஜீனியஸ்கல் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்! நீங்க?

மூங்கில் காட்டில் உலவும் பாம்பு… 5 நொடிகளில் ஜீனியஸ்கல் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்! நீங்க? Source link

தஞ்சை : சுற்றுலா பேருந்து விபத்து 2 பேர் பலி.. 40 பேர் படுகாயம்.. முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு.!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு அருகே ஆம்னி பேருந்து ஒன்று 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. இந்தப் பேருந்து கீழையூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், நிலை தடுமாறிய பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 40 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து அருகில் இருந்த மற்ற வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் … Read more

ரெட் அலர்ட் : தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழ்டுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, ஏப்ரல் 2 முதல் 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. இதேபோல், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் … Read more

கலாஷேத்ரா விவகாரம்: உதவி பேராசிரியர்மீது 3 பிரிவுகளில் வழக்கு! – தனிப்படை அமைத்து தேடும் போலீஸ்

சென்னை திருவான்மியூரில் மத்திய கலாசார அமைச்சகத்தின் நேரடி நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலைக் கல்லூரி. இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்குப் பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக அந்தக் கல்லூரியின் முன்னாள் இயக்குநரே சமூக வலைதளத்தில் புகார் எழுப்பியிருந்தார். அதைத் தொடர்ந்து, மாணவிகளும் பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோர்மீது பாலியல் தொல்லைக் குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளிருப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். கலாஷேத்ரா மாணவிகளின் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து தாமாக மாநில மகளிர் ஆணையம் முன்வந்து விசாரணையைத் தொடங்கியது. இதனிடையே, கலாஷேத்ரா பாலியல் தொல்லை … Read more

ஐபிஎல் போட்டி: சென்னை சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றி போக்குவரத்து மாற்றம்

சென்னை: ஐபிஎல் போட்டியை முன்னிட்டு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஐபிஎல் போட்டி சென்னை எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுவதை முன்னிட்டு ஏப்ரல் 3,12, 21, மே 10 மற்றும் 14 ஆகிய நாட்களில் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் மற்றும் ஏப்ரல் 30 மற்றும் மே 6 ஆகிய நாட்களில் மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி … Read more

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் என் பெயரை கெடுக்க முயற்சி: டெல்லி-போபால் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்து பிரதமர் மோடி குற்றச்சாட்டு

போபால்: எனது நற்பெயருக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் களங்கம்விளைவிக்க தொடர்ந்து சிலர் முயற்சி செய்து வருகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். மத்தியபிரதேச மாநிலம் போபால் – புதுடெல்லி இடையேயான புதிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி போபால் நகரில் நேற்றுகொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: தற்போது போபால்-டெல்லி இடையே வந்தே பாரத் ரயிலைத் தொடங்கி வைத்துள்ளோம். இந்தவந்தே பாரத் சேவையை தொடங்கிவைக்கும் நாள் ஏப்ரல் 1-ம் … Read more

ரஃபேல் வாட்ச் பில் வரல; ஏப்ரல் 14 திமுக ஊழல் பட்டியல் வருமா? அண்ணாமலை கையில் 10 பேர் லிஸ்ட்!

தமிழக அரசியலில் சர்ச்சைகளுக்கு சிறிதும் பஞ்சமின்றி அரசியலை முன்னெடுத்து வருபவர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. தினசரி ஏதேனும் ஒரு வகையில் தலைப்பு செய்தியாகி விடுகிறார். அந்த வகையில் தனது கையில் கட்டியிருக்கும் ரஃபேல் வாட்ச் விஷயத்தை போட்டு உடைத்து தமிழக மக்களின் ரத்த அழுத்தத்தை எகிற வைத்தார். ஏனெனில் அது பிரான்ஸ் நாட்டின் ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களில் இருந்து தயாரிக்கப்பட்டது என்றும், விலை பல லட்சங்கள் என்றும் தகவல்கள் வெளியாகின. ரஃபேல் வாட்ச் பில் … Read more

Rashmika Mandanna: விஜய்யை பிரிந்து நடிகர் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸை காதலிக்கும் ரஷ்மிகா?

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் Rashmika Mandanna dating Bellamkonda Srinivas?: தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸை ரஷ்மிகா மந்தனா காதலிக்கிறார் என்று ஆளாளுக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள். ​விஜய் தேவரகொண்டா​ரஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக பல காலமாக பேசப்படுகிறது. நாங்கள் காதலிக்கிறோம் என்று அவர்கள் கூறாவிட்டாலும் விஜய்யும், ரஷ்மிகாவும் காதலர்கள் தான் என அவர்களின் ரசிகர்கள் நம்புகிறார்கள். அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் … Read more