தமிழ்நாட்டு சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்வு! – பொதுமக்களை பாதிக்குமா?

தமிழகம் முழுவதும் 55 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இதில் 29 இடங்களில் இருக்கும் சுங்கச்சாவடிகளில் நேற்று (1-ம் தேதி) முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. முன்னதாக நடப்பு நிதியாண்டில் இந்தக் கட்டணத்தை 5 முதல் 10 சதவிகிதம் வரை உயர்த்த வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. இதன்படி திருத்தப்பட்ட கட்டணம் அமலுக்கு வந்திருக்கிறது. அதாவது சென்னையை அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில், கார்களுக்கு ரூ.60-லிருந்து ரூ.70-ஆகவும், இலகுரக வாகனங்களுக்கு ரூ.105-லிருந்து ரூ.115, லாரி மற்றும் பேருந்துகளுக்கு … Read more

இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது லாரி மோதிய விபத்தில், லாரியின் சக்கரத்தில் சிக்கி பெண் உடல் நசுங்கி பலி

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது லாரியின் சக்கரம் ஏறியதில் பெண் உடல் நசுங்கி உயிரிழந்த விபத்து காட்சியும், விபத்தை ஏற்படுத்திய டிரைவர் மற்றும் கிளீனர் தப்பி ஓடுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்யும் சிறுபுழல்பட்டியை சேர்ந்த விஜயா, அவரது மகன் வேலு ஆகியோர் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளனர். சாலை வளைவில் திரும்பிய போது பின்னால் வந்த லாரி இடித்ததால் வாகனத்துடன் இருவரும் கீழே … Read more

ராமேசுவரம் – இலங்கை இடையே இரு வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து – சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

சென்னை: ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு இரு வழித்தடங்களில் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மற்றும் பொதுப்பணித்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. விவாதத்தின் நிறைவில் அத்துறைகளின் அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்து பேசியதாவது: சாலை விபத்துகளில் சிக்கி தவிப்போரின் உயிர்களை காக்க முதல்வர் ஸ்டாலின் உருவாக்கிய ‘இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48’ திட்டத்தின்கீழ், 4 ஆயிரத்து 363 … Read more

திருமலைக்கு மலைப்பாதை வழியாக நடந்து வரும் பக்தர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன் விநியோகம் தொடக்கம்

திருமலை: திருப்பதியில் இருந்து திருமலைக்கு நேர்த்தி கடனாக அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு ஆகிய இரு மார்க்கங்கள் வாயிலாக தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நடந்தே மலையேறி சென்று ஏழுமலையானை தரிசிப்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கையாகும். சில ஆண்டுகளாக இவ்விரு பாதைகளில் செல்லும் பக்தர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன. மேலும், இரண்டு லட்டு பிரசாதங்களும் இலவசமாக வழங்கப்பட்டன. கரோனா தொற்றின் போது திவ்ய தரிசன டோக்கன் விநியோகம் நிறுத்தப்பட்டது. இது நேற்று முதல் … Read more

ஹரி பத்மன் எஸ்கேப்; கலாஷேத்ரா பாலியல் புகாரில் திடீர் ட்விஸ்ட்… வலை வீசும் சென்னை போலீஸ்!

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளையின் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரி அமைந்துள்ளது. இது மத்திய அரசின் நிதியுதவி உடன் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இங்கு மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக பரபரப்பு புகார் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பேராசிரியர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்ய வேண்டும் என்று மாணவிகள் பல்வேறு கட்டப் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். கலாஷேத்ராவில் பகீர் தவறு செய்தவர்களை கல்லூரி இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் காப்பாற்றுவதாகவும், நடனத் துறை தலைவர் … Read more

Pathu thala VS Viduthalai: போட்டிபோட்டு பொய்யான தகவலை வெளியிடுகிறார்கள்..பத்து தல – விடுதலை படக்குழுவை வெளுத்து வாங்கிய பிரபலம்..!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் ​பத்து தல சிம்பு நடிப்பில் கிருஷ்ணாவின் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளியான திரைப்படம் தான் பத்து தல. இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக்கும் நடித்துள்ளார். கன்னட திரைப்படமாக MUFTI என்ற படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த பத்து தல என்றாலும் திரைக்கதையில் பல மாற்றங்களை செய்து உருவாக்கியிருக்கிறார் கிருஷ்ணா. இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற படத்தின் மீதான எதிர்பார்ப்பு … Read more

திருச்செந்தூர்-சென்னை இடையே செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கியது

திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி வரையிலான அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் கடந்த 3 வருடங்களாக நடந்து வந்தது. இந்த பணிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முழுமையாக நிறைவடைந்தது. பணிகள் நிறைவடைந்த பின்னர், மின்சார இரயில் சேவையாக மாற்றப்பட்டு இன்று முதல் (ஏப்ரல் 1 )செந்தூர் எக்ஸ்பிரஸ் இரயில் 1 மணி நேரம் 10 நிமிடம் பயணம் நேரம் அதிகரிக்க பட்டு இன்று அமலுக்கு வந்துள்ளது. அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பிருந்து திருச்செந்தூர்– நெல்லை … Read more

ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கோடையின் தாக்கம் அதிகமாக இருக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்!

ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் வரையில் கடும் கோடை வெயில் இருக்கும் என்றும், இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமான வெப்பநிலை இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய,  கிழக்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீசும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. பீகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், ஒடிசா, மேற்குவங்கம், மகாராஷ்ட்ரா குஜராத், பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் வெப்பம் அதிகளவில் காணப்படும் என்றும் இந்திய வானிலை மையத்தின் இயக்குனர் ஜெனரல் … Read more

வட கொரியாவில் கர்ப்பிணிப் பெண்களுக்கு மரண தண்டனை

வடகொரியாவில் கிம் ஜாங் உன்னின் சர்வாதிகார ஆட்சி காலத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல் பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளது தென்கொரியா. அதில் சிறுவர்களுக்கு மரண தண்டனை, ஆறு மாத கர்ப்பிணிக்கு மரண தண்டனை, ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை போன்ற மிக கொடூரமான மனித உரிமை மீறலை மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் உயரம் குறைவான பெண்களுக்கு கருப்பைகள் அகற்றப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. Source link

ஆயிரக்கணக்கான வண்ண மலர்களுடன் தேக்கடியில் 15வது மலர் கண்காட்சி

கூடலூர்: ஆயிரக்கணக்கான வண்ண மலர்களுடன் தேக்கடியில் 15வது மலர்கண்காட்சி நேற்று மாலை முதல் தொடங்கியது. கேரள மாநிலம், தேக்கடி வேளாண் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து நிர்வாகம், மன்னாரத்தரை கார்டன், குமுளி வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் தேக்கடி 15வது மலர்கண்காட்சி தேக்கடி – குமுளி ரோடு, கல்லறைக்கல் மைதானத்தில் நேற்று மாலை தொடங்கியது. மே 14ம் தேதி வரை நடைபெறும் இந்த மலர் கண்காட்சியில் ஆயிரக்கணக்கான மலர்கள், நூற்றுக்கணக்கான மருத்துவ மூலிகைச்செடிகள், அலங்காரச்செடிகள், தோட்டச்செடிகள், சமையலறை … Read more