தமிழ்நாட்டு சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்வு! – பொதுமக்களை பாதிக்குமா?
தமிழகம் முழுவதும் 55 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இதில் 29 இடங்களில் இருக்கும் சுங்கச்சாவடிகளில் நேற்று (1-ம் தேதி) முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. முன்னதாக நடப்பு நிதியாண்டில் இந்தக் கட்டணத்தை 5 முதல் 10 சதவிகிதம் வரை உயர்த்த வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. இதன்படி திருத்தப்பட்ட கட்டணம் அமலுக்கு வந்திருக்கிறது. அதாவது சென்னையை அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில், கார்களுக்கு ரூ.60-லிருந்து ரூ.70-ஆகவும், இலகுரக வாகனங்களுக்கு ரூ.105-லிருந்து ரூ.115, லாரி மற்றும் பேருந்துகளுக்கு … Read more