கொரோனாவுக்கு உலக அளவில் 6,831,892 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.31 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,831,892 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 683,991,820 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 656,926,949 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 39,914 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு அந்நிய சக்திகளின் ஆதரவுடன் எனது நற்பெயரை கெடுக்க சதி: போபால்-டெல்லி வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார்

போபால்: ‘எனது நற்பெயரை சீர்குலைக்க விரும்பும் சிலர், அதற்காக இந்தியாவிலும், வெளிநாட்டிலும் உள்ளவர்களுக்கு பணம் கொடுத்து இணைந்து செயல்படுகின்றனர்’ என காங்கிரசை பிரதமர் மோடி மறைமுகமாக தாக்கி உள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு மற்றும் ராகுலின் தகுதிநீக்கம் தொடர்பாக ஜெர்மனி அரசு காங்கிரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது போன்ற விவகாரங்களால் பாஜ, காங்கிரஸ் இடையே கடும் வார்த்தை மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராணி … Read more

Ram charan salary : ஷங்கர் படத்துக்காக ராம்சரண் வாங்கிய சம்பளம்.. வாயடைத்து போன டோலிவுட்!

ஐதராபாத் : நடிகர் ராம்சரணின் மார்கெட் வேல்யூ ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு மிகவும் அதிகமாக உயர்ந்துள்ளது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் தன்னுடைய 15வது படத்தில் நடித்து வருகிறார் ராம்சரண். இந்தப்படத்தின் தலைப்பு தற்போது கேம் சேஞ்சர் என்று வைக்கப்பட்டுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவரும் இந்தப்படத்தில் கியாரா அத்வானி, ராம் சரணுக்கு ஜோடியாகியுள்ளார். நடிகர் ராம்சரண் பிரபல தெலுங்குப்பட நடிகர் சிரஞ்சீவியின் மகனான ராம்சரணும் தெலுங்கின் முன்னணி ஹீரோ என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இவர் நடிப்பில் அடுத்தடுத்த … Read more

துபே மந்தமான பேட்டிங், இம்பேக்ட் கொடுக்காத தேஷ்பாண்டே: சி.எஸ்.கே தோல்விக்கு இதுதான் காரணமா?

துபே மந்தமான பேட்டிங், இம்பேக்ட் கொடுக்காத தேஷ்பாண்டே: சி.எஸ்.கே தோல்விக்கு இதுதான் காரணமா? Source link

விபத்தில் கணவரை  இழந்த பெண்ணின் மறுமணத்தை காரணம் காட்டி இன்சூரன்ஸ் தொகையை மறுக்க முடியாது ஹைகோர்ட் அதிரடி!

திருமணமான பெண்ணின் கணவர் எதிர்பாராத விதமாக இறந்து விடும் நிலையில், சம்பந்தப்பட்ட பெண்ணின் மறுமணத்தை மட்டும் ஒரு காரணமாக வைத்து, இறந்த அவரின் கணவருக்கு கிடைக்க வேண்டிய பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் தர மறுக்க முடியது என்று , மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு நடந்த இருசக்கர வாகன விபத்தில் 19 வயது இளம் பெண்ணின் கணவர் கணேஷ் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.  கணேஷ் உயிருடன் இருந்த பொழுது இப்ஃகோ டோக்கியோ இன்சூரன்ஸ் … Read more

பெண்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு! ‘செல்வமகள்’ சேமிப்பு திட்ட வட்டி அதிகரிப்பு..!!

வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 6 தவணைகளாக மொத்தம் 2.5 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. அதை பின்பற்றி, வங்கிகள், வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுக்கு அளிக்கும் வட்டி விகிதத்தை உயர்த்தின. பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து, அதன் மூலம் பொதுமக்கள் அதிகம் சேமிக்க அரசு நல்ல வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்த நிலையில், அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கு தொடர்ந்து 2-வது முறையாக வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. அவற்றுக்கு காலாண்டுக்கு … Read more

தீயாய் பரவும் வீடியோ.! தீவிரமாய் தேடும் போலீஸ்..!

சமீப காலமாக ரீல்ஸ் வீடியோ மோகத்திற்கு ஆசைபட்டு போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஆபத்தான சாகசங்களை பொது வெளியில் செய்யும் சம்பவங்கள் அதிகாரித்து வருகிறது. அப்படி ஒரு சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இளைஞர் ஒருவர் இரு பெண்களை பைக்கில் வைத்து செய்த சாகசம் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு இளைஞர் தனது பைக்கில் முன் பகுதியில் ஒரு பெண்ணையும் பின் பகுதியில் ஒரு பெண்ணையும் வைத்து நடுவே இவர் அமர்ந்து வேகமாக வண்டி ஓட்டுகிறார். மூன்று … Read more

குழாயடி சண்டையில் வீடு புகுந்து பெண்ணை கட்டிலின் மீது தள்ளி சரமாரியாக தாக்கிய சம்பவத்தில் தாய், மகள் கைது..!

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே குழாயடி சண்டையில் பெண்ணை, ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வீடு புகுந்து தாக்கிய காட்சி செல்போனில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மூங்கில்விளை காலனியை சேர்ந்த ரமேஷின் மனைவி மஞ்சுவுக்கு வீட்டின் முன்பு உள்ள தெருக்குழாயில் குடிநீர் பிடிப்பது தொடர்பாக அதே பகுதியை சேரந்த மகேஸ்வரி என்பவருடன் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 29ம் தேதி மதிமகேஸ்வரி மற்றும் அவரது கணவர் கோபாலகிருஷ்ணன், தாய் தமிழ்செல்வி ஆகியோர் ரமேஷின் வீட்டிற்கு … Read more

8 புதிய மாவட்டங்கள் உருவாக்க பரிசீலனை – முதல்வர் முடிவெடுப்பார் என தகவல்

சென்னை: தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்களை உருவாக்குவது தொடர்பான கோரிக்கைகள் வந்துள்ளதாகவும், அவற்றைப் பரிசீலிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் என்றும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, “ஆரணியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுமா?” என்று அதிமுக உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் கேள்வி எழுப்பினார். அதேபோல, “கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படுமா?” என்று திருவிடைமருதூர் உறுப்பினரும், அரசு கொறடாவுமான கோவி.செழியன் கேள்வி எழுப்பினார். இவற்றுக்குப் பதில் அளித்து … Read more

சிலிகுரியில் ஜி20 கூட்டம் | சாகச சுற்றுலாவுக்கு இந்தியாவில் பல வாய்ப்புகள் – அமைச்சர் கிஷண் ரெட்டி பெருமிதம்

புதுடெல்லி: சாகச சுற்றுலாவுக்கு இந்தியாவில் பல வாய்ப்புகள் உள்ளன என சிலிகுரியில் நடந்த ஜி20 மாநாட்டின் இரண்டாவது செயல்பாட்டு கூட்டத்தில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறினார். சர்வதேச அளவிலான ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக நாட்டின் பல பகுதிகளில் ஜி20க்கான செயல்பாட்டு கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மகராஷ்டிராவின் புனேவில் கடந்த ஜனவரியில் நடைபெற்ற முதல் கூட்டத்துக்கு பின் இரண்டாவது கூட்டம் மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்துக்கு … Read more