Shruti on first crush : ஸ்ருதிஹாசனுக்கு எந்த நடிகர் மீது க்ரஷ் தெரியுமா..அவங்களே சொல்லியிருக்காங்க!

மும்பை : நடிகை ஸ்ருதிஹாசன் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா உள்ளிட்டவர்களுடன் அவர் நடித்திருந்த படங்கள் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வெளியாகின. அடுத்ததாக பிரபாசுடன் இணைந்து சலார் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை கேஜிஎப் புகழ் பிரஷாந்த் நீல் இயக்கியுள்ளார். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் ஸ்ருதிஹாசன். தன்னுடைய காதலருடன் நெருக்கமான வீடியோக்களை அடுத்தடுத்து பகிர்ந்து வருகிறார். நடிகை ஸ்ருதிஹாசன் நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளாகவும் நடிகையாகவும் உள்ள ஸ்ருதிஹாசன், … Read more

தேசிய அளவிலான மலைப்பகுதி சைக்கிள் போட்டி : தங்கம் வென்று கோவை மாணவி சாதனை

தேசிய அளவிலான மலைப்பகுதி சைக்கிள் போட்டி : தங்கம் வென்று கோவை மாணவி சாதனை Source link

#BREAKING | தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? அமைச்சர் மா சுப்பிரமணியன் வெளியிட்ட அதிகாரபூர்வ செய்தி!

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது, நாடு முழுவதும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்த சில வாரங்களில் மட்டும் நோய் தொற்றுக்கு பாதிப்பு உள்ளாகியுள்ளனர்.  இதேபோல் தமிழகத்திலும் கடந்த ஆறு, ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன், “தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் முக கவசம் அணிவது இன்று முதல் கட்டாயம் என்று … Read more

சிறுவனின் சிறு தவறினால் நேருக்கு நேர் மோதி கொண்ட 2 லாரிகள்..!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே உள்ள ஜோதி காலனியில் இன்று காலை இருசக்கர வாகனம் லாரியை முந்தி செல்ல முயன்று குறுக்கே சென்றது. அப்பொழுது ஹாலோ பிளாக் கற்களை ஏற்றிக் கொண்டு மேட்டுப்பாளையம் சென்று கொண்டு இருந்த லாரி இருசக்கர வாகனத்தில் மோதி விடாமல் இருக்க திருப்பிய போது எதிரே மின் கம்பத்தில் மோதி கோவை நோக்கி வந்த மற்றொரு லாரி மீது மோதி கீழே சாய்ந்தது. இரு சக்கர வாகனத்தின் … Read more

அப்படியே ஒரு போடு கோலமாவு ‘கோப்ரா’.. பெண்களே உஷார்..! எச்சரிக்கையால் எஸ்கேப்பான பெண்

புதுச்சேரி அடுத்த கன்னியகோவிலில் அதிகாலையில் கோலம் போடுவதற்காக , கோலமாவு டப்பாவை திறந்த போது அதற்குள் நாகப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்ததை கண்டு பெண் கூச்சலிட்டதால், அந்த பாம்பு பிடிக்கப்பட்டது கடலூர் – புதுச்சேரி எல்லையில் உள்ள கன்னியகோவில் பகுதியில் வசிப்பவர் மகாலிங்கம். தனியார் தொழிற்சாலையில் மேலாளராக உள்ள இவரது மனைவி தினமும் காலையில் எழுந்து வாசலில் கோலம் போடுவதை வழக்கமாகக் வைத்திருந்தார் . கோலமாவுகள் அடங்கிய டப்பாவை காலணிகள் வைக்கும் ஸ்டாண்டில் வைத்திருந்தார். சனிக்கிழமை அதிகாலை … Read more

மீண்டும் ஊரடங்கு என்பது வெறும் வதந்தி – சுகாதாரத் துறை அமைச்சர் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதே நேரத்தில், கரோனா தொற்று அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்ற தகவல் வெறும் வதந்திதான் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2020 மார்ச் மாதம் தொடங்கிய கரோனா வைரஸ் தொற்றால், இதுவரை 35.96 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 38,050 பேர் இறந்துள்ளனர். கரோனா தொற்றுடன் இணை நோய்கள் மற்றும் பிந்தைய பாதிப்புகளால் … Read more

வெறும் பத்தே நாட்களில், ரூ.4.50 கோடி அரசுக்கு செலவு வைத்ததாக ரிஷி சுனக் மீது எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், தனி விமானத்தில் பயணிக்க, பத்தே நாட்களில், நான்கரை கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. கடந்த நவம்பர் மாதம், எகிப்தில் நடைபெற்ற காலநிலை மாற்ற மாநாட்டிலும், இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டிலும் பங்கேற்க ரிஷி சுனக் தனி விமானத்தில் பயணித்துள்ளார். அதை தொடர்ந்து லாட்வியாவிற்கும், எஸ்டோனியாவிற்கும் அவர் தனி விமானத்திலேயே சென்றுள்ளார். விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ரிஷி சுனக் தனி விமானத்தில் பயணிக்க, நான்கரை கோடி … Read more

கனடாவில் நதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 8 புலம்பெயர் மக்கள்: புதிய தகவலை வெளியிட்ட அதிகாரிகள்

கனடா – அமெரிக்க எல்லையில் இந்த வாரம் St.லாரன்ஸ் நதியில் இருந்து 8 புலம்பெயர் மக்களின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், அவர்களின் அடையாளம் காணும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. கனடா மற்றும் அமெரிக்க அதிகாரிகளிடம் இந்த விவகாரம் தொடர்பில் கனடா மற்றும் அமெரிக்க அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் Akwesasne Mohawk பொலிசார் தெரிவித்துள்ளனர். Credit : THE CANADIAN PRESS வியாழன் அன்று, சதுப்பு நிலப்பகுதியில் ஐந்து பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தையின் உடல்களை Akwesasne … Read more

கடன் தருவதாக பெண்களிடம் ஆதார், பான் கார்டு விவரம் சேகரிப்பு: பைனான்ஸ் ஊழியர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெருமாள்பேட்டை பகுதியில் சிலர் மகளிர் குழுவினருக்கு  ரூ.1 லட்சம் வட்டியில்லா கடன் உதவி அளிப்பதாக கூறி, அப்பகுதியில் உள்ள பெண்களின் ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட விவரங்களை சேகரித்து வருவதாக வாணியம்பாடி நகர போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அங்கு சென்ற வாணியம்பாடி நகர போலீசாரும் வருவாய்த்துறையினரும், விவரங்களை சேகரித்து கொண்டிருந்த 2 பெண்களை பிடித்து விசாரித்தனர். இதில், அவர்கள் சேலம் பகுதியை சேர்ந்த தனியார் நிதி நிறுவன … Read more

குமாரசாமி கட்சிக்கு தொடர்புடைய கூட்டுறவு வங்கிகளில் ஐடி ரெய்டு

ஹாசன்: கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தள கட்சிக்கு தொடர்புடைய கூட்டுறவு வங்கிகளில் வருமானவரித்துறை சோதனை நடத்தினர். கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்நிலையில்குமார சாமி தலைமையிலான மஜத கட்சிக்கு தொடர்புடைய கூட்டுறவு வங்கிகளில் வருமானவரித்துறையினர் திடீரென சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த கூட்டுறவு வங்கியின் இயக்குனர்களாக முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் அமைச்சர் எச்.டி.ரேவண்ணாவின் மகன் சூரஜ் ரேவண்ணா இருக்கிறார். இவர் மஜத மேலவை உறுப்பினராக உள்ளார். மேலும் மஜத எம்எல்ஏ … Read more