சூர்யா விலகிய 'வணங்கான்' படத்தின் தற்போதைய நிலை என்ன தெரியுமா.?: லேட்டஸ்ட் அப்டேட்.!

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’ படப்பிடிப்பு குறித்த லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு வழங்கும் இலவச கோதுமை மாவை வாங்க திரண்ட பாகிஸ்தான் மக்கள்

பாகிஸ்தானில் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், அரசு சார்பில் வழங்கப்படும் இலவச கோதுமை மாவை வாங்க திரண்டனர். அந்நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை 45 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் அரசு ரமலான் மாதத்தில் மக்களுக்கு இலவசமாக மாவு விநியோகிக்கும் திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களில், இலவச உணவு பொருட்களை வாங்கத் திரண்ட கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. Source link

Viduthalai Part 1 Review: அதிகாரத்தைக் கேள்வி கேட்கும் ஒரு ராவான ரியலிச சினிமா! ஆனால், சிக்கல் என்ன?

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ‘விடுதலை’ இரண்டு பாகங்களாகத் திரைக்கு வரவிருக்கிறது. முதல் பாகம், படத்தின் கதைக்களம், அதன் மாந்தர்கள், அரசியல் பின்புலம் போன்றவற்றைக் கட்டமைத்து, அந்த உலகத்தை நமக்கு அறிமுகம் செய்யும் ஒன்றாக உருவாகியிருக்கிறது. ஒரு படைப்பாளராகத் தன் மேலிருக்கும் எதிர்பார்ப்புகளை மீண்டும் நிறைவேற்றியிருக்கிறாரா வெற்றிமாறன்? 1980களின் இறுதியில் அருமபுரி என்னும் இடத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் சுரங்கம் ஒன்றைக் கட்டமைத்து கனிம வளம் எடுக்க முடிவு செய்கிறது அரசு. அதற்கு எதிராகப் போராடுகிறார்கள் பெருமாள் (விஜய் … Read more

நவ்ஜோத் சிங் சித்து சிறையில் இருந்து விடுதலையானார்…

1988 ம் ஆண்டு சாலையின் குறுக்கே காரை நிறுத்தியதால் ஏற்பட்ட தகராறில் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து-வால் தாக்கப்பட்ட குர்நாம் சிங் என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பாக சித்து மீது பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் இருந்து பாட்டியாலா செஷன்ஸ் நீதிமன்றம் 1999 ம் ஆண்டு அவரை விடுவித்தது. இதனை எதிர்த்து செய்யப்பட்ட மேல் முறையீட்டில் சித்துவுக்கு தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 33 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற இந்த வழக்கில் … Read more

தமிழகம் முழுவதும் சுங்க கட்டண உயர்வை கண்டித்து 55 சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்: மாநில தலைவர் பரபரப்பு பேட்டி

சேலம்: தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து, 55 சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 566 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஒப்பந்த அடிப்படையில் கட்டணம் வசூலிக்க தனியார் நிறுவனங் களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச்சாவடிகளிலும் இந்த நடைமுறையிலேயே வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.  ஆண்டுக்கு ஒரு முறை இந்த சுங்கச்சாவடிகளின் கட்டணம் … Read more

சென்னையில் 5 மெட்ரோ ரயில்நிலையங்களில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்படும் என அறிவிப்பு

சென்னை: சென்னையில் 5 மெட்ரோ ரயில்நிலையங்களில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடபழனி,சென்ட்ரல்,திருமங்கலம்,விம்கோ நகர்,நந்தனம் ரயில்நிலையங்களில் எல்இடி திரையில் ஒளிபரப்பப்படும். ரயில் நிலையங்களில் கிரிக்கெட் போட்டியை பார்க்க 1 மணி நேரத்துக்கு ரூ.10வசூலிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் வைக்கத்தில் உள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வைக்கத்தில் உள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள பெரியார் படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு பொன்னாடை போர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கினார்.

ஓட்டுப்பதிவு நடக்கும் மே 10ல் சம்பளத்துடன் கூடிய விடுமுறை| A holiday with pay on May 10, when polling takes place

பெங்களூரு : ஓட்டுப்பதிவு நடக்கும் மே 10ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கும்படி இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகா சட்டசபைக்கு மே 10ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. மே 13ல் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. ஏப்ரல் 13ம் தேதி முதல் மனு தாக்கல் ஆரம்பமாகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடக்கிறது. எனவே அனைவரும் தங்களின் ஜனநாயக கடமை ஆற்றும் வகையில், ஓட்டுப்பதிவு நாளன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கும்படி அனைத்து நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசு … Read more

அரசியல்வாதியை திருமணம் செய்யும் பிரபல நடிகை!

நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கை மற்றும் நடிகையான ப்ரனிதி சோப்ரா ஹிந்தியில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது இவருக்கு 34 வயது ஆகிறது. ப்ரனிதி சோப்ராவும், ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரான ராகவ் சதாவும் காதலிப்பதாக ஏற்கனவே பல கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியானது. ஆனாலும் இருவரும் இதை உறுதிப்படுத்தாமல் இருந்தனர். சமீபத்தில் இருவரும் மும்பை விமான நிலையத்தில் ஒரே காரில் ஏறிச்செல்லும் வீடியோ வெளியாகி … Read more

Samantha Angry : நடிகை சமந்தா காட்டம்.. எதுக்காகத் தெரியுமா.. நியாயமாத்தான் இருக்கு!

ஐதராபாத் : நடிகை சமந்தா தற்போது தன்னுடைய பிரச்சினைகளில் இருந்து மீண்டு, மீண்டும் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது அடுத்தடுத்தப் படங்கள் ரிலீசாகி வருகின்றன. யசோதா படத்தை தொடர்ந்து அடுத்ததாக சமந்தா நடிப்பில் சாகுந்தலம் படம் ரிலீசாகவுள்ளது. இதனிடையே நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்திலும் நடித்து முடித்துள்ளார் சமந்தா. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை சமந்தா நடிகை சமந்தா எப்போதுமே சர்வதேச அளவில் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகையாகவே வலம் வந்துக் … Read more