அரசுக்கு எதிராக போராட்டம்.. ‘நீங்க நிறுத்தலன்னா நாங்க நிறுத்துவோம்’.. எச்சரிக்கும் சீமான்.!

கேரளா ஸ்டோரி படத்தை திரையிட அரசு அனுமதி அளித்தால், திரையரங்குகளுக்கு சென்று தடுத்து நிறுத்துவோம் என

எச்சரித்துள்ளார்.

கள்’ளு என்பது வேற..மது வேற..சீமான் பேட்டி!

‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை தொடர்ந்து பிரதமர் மோடி ஆதரித்த இரண்டாவது படம் தான் ‘தி கேரளா ஸ்டோரி’. பிரதமர் ஆதரித்த இரண்டும் திரைப்படுங்களுமே, சிறுபான்மையின மக்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்களே என பல்வேறு தரப்பினர் கூறுவருகின்றனர். கடந்த ஆண்டு கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் பேசிய இஸ்ரேலிய இயக்குனர் நடாவ் லாபிட், காஷ்மீர் ஃபைல்ஸ் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பை தூண்டும் படைப்பு என கருத்து தெரிவித்தது முக்கியத்துவம் வாய்ந்தது.

அதையடுத்து அவருக்கு எதிராக வலதுசாரி இந்துத்துவவாதிகள் கடும் எதிர்ப்பை காட்டின. நிலமை சீரியஸ் ஆவதை உணர்ந்த இந்தியாவிற்கான இஸ்ரேலிய தூதர் நவோர் கிலான், இயக்குநர் நடாவ் லிபிட் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். இறுப்பினும் இயக்குநர், தன் கருத்தில் உறுதியாகவே இருந்தார். இந்தநிலையில் ‘பயங்கரவாத சதியை அடிப்படையாகக் கொண்டு தி கேரளா ஸ்டோரி படம் எடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தின் உண்மையை படம் காட்டுகிறது’ என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்துள்ள இரண்டாவது படம் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிட்டால் சமூகப் பதற்றம் ஏற்படும் என உளவுத் தகவல் வந்த பின்னர், போலீஸ் பாதுகாப்புடன் படத்தை திரையிட அரசு அனுமதி அளித்தது தான் தற்போது சர்ச்சையாகியுள்ளது. 32 ஆயிரம் இந்து பெண்கள், இஸ்லாம் மதத்திற்கு கட்டாயமாக மதம் மாற்றப்பட்டனர் என ஆதராமற்ற, முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சார படத்தை தடைசெய்ய வேண்டும் என இடதுசாரிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், அரசு அனுமதி அளித்ததற்கு கூட்டணி கட்சிகளும், தமிழ்தேசிய அமைப்புகளும் கடும் எதிர்வினை ஆற்றியுள்ளன.

‘இது திராவிட மாடல் இல்லை.. இது

மாடல்’ என தமிழ்தேசிய அமைப்பான மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி பொளந்து கட்டிய நிலையில், தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டம் அறிவித்துள்ளார். முன்னதாக, படம் திரையிடலை நிறுத்தி, தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என்று சீமான் கோரிக்கை வைத்திருந்தார். இந்தநிலையில் தான் தற்போது போராட்டம் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘‘மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து தமிழ்நாடு அரசு The Kerala Story திரைப்படத்தை தடைசெய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன். அதையும் மீறி இத்திரைப்படத்தை தமிழ்நாடு அரசு திரையிட அனுமதித்தால், தமிழ்நாட்டில் திரைப்படம் திரையிடப்படும் ஒவ்வொரு திரையரங்கையும் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டு திரைப்படத்தை தடுத்து நிறுத்துவோம்!’’ என எச்சரித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.