Pichaikkaran 2: 'பிச்சைக்காரன் 2' படத்தின் வெற்றி: விஜய் ஆண்டனி செய்துள்ள நெகிழ்ச்சியான காரியம்.!

அண்மையில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகியுள்ள ‘பிச்சைக்காரன் 2’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது. விஜய் ஆண்டனியே இயக்கி, நடித்து, தயாரித்துள்ளார். இதன் முதல் பாகம் வெளியாகி ஏற்கனவே வசூல் சாதனை படைத்த நிலையில் தற்போது இரண்டாம் பாகம் ரிலீசாகியுள்ளது. இந்நிலையில் விஜய் ஆண்டனி தற்போது செய்துள்ள ஒரு காரியம் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் விஜய் ஆண்டனி. இதனையடுத்து ஹீரோவாக களமிறங்கிய இவர் தனது முதல் படத்திலே ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தார். ஹீரோ, இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் களமிறங்கிய விஜய் ஆண்டனி தற்போது ‘பிச்சைக்காரன் 2’ படம் மூலம் இயக்குனர் அவதாரமும் எடுத்துள்ளார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

‘பிச்சைக்காரன்’ முதல் பாகம் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக ரிலீசானது. சசி இயக்கத்தில் வெளியாகி வசூல் மற்றும் விமர்சனரீதியாக எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றது இந்தப்படம். இதனையடுத்து இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை தானே நடித்து இயக்கவுள்ளதாக விஜய் ஆண்டனி அறிவித்தார். இதன் படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள பகுதிகளில் நடைபெற்ற போது கடுமையான விபத்தில் சிக்கினார்.

இந்நிலையில் ‘பிச்சைக்காரன்’ இரண்டாம் பாகம் கடந்த 19 ஆம் தேதி ரிலீசானது. விஜய் ஆண்டனி இந்தப்படத்தை இயக்கி நடித்ததுடன் தயாரிக்கவும் செய்துள்ளார். காவ்யா தர்பார், ஹரிஷ் பேரடி, ஜான் விஜய், யோகி பாபு உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். ‘பிச்சைக்காரன் 2’ படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூலில் கலக்கி வருவது விஜய் ஆண்டனிக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Dhruva Natchathiram: தங்கலானுக்கு முன்பாக ரிலீசாகும் விக்ரம் படம்: வெளியான தாறுமாறு தகவல்.!

இந்தப்படம் முதல் நாளில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் நான்கு கோடி வரை வசூலித்தது. தமிழில் மூன்று கோடி வரை வசூலித்தது. இதுவரை வெளியான விஜய் ஆண்டனி படங்களிலே ‘பிச்சைக்காரன் 2’ படம் தான் முதல் நாளில் அதிக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும், 5 நாட்களில் இந்தப்படம் ரூபாய் 22 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திருப்பதிக்கு சென்றுள்ள விஜய் ஆண்டனி அங்குள்ள யாசகர்களை சந்தித்து அவர்களுக்கு போர்வை, செருப்பு, பிளாஸ்டிக் விசிறி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கியுள்ளார். மேலும் அவர்களுடன் செல்பி புகைப்படமும் எடுத்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Ashish Vidyarthi: 60 வயதில் ‘கில்லி’ பட நடிகருக்கு நடந்து முடிந்த திருமணம்: வைரலாகும் போட்டோஸ்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.