மழைநீர்க் கால்வாய்: சுட்டிக்காட்டிய விகடன்; பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்த சென்னை மாநகராட்சி!

சென்னை ஜார்ஜ் டவுன் கடற்கரை சாலை இரண்டாவது தெருவில் மழைநீர் வடிகால் கட்டுமான பணி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.

இந்த சாலை நேரடியாக பாரிமுனை மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தை இணைக்கும் முக்கிய சாலையாக இது உள்ளது. கடந்த சில நாள்களாக இந்த சாலையில் நடைபெரும் மழைநீர்க்  கால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு, கான்கிரீட் போடப்பட்டு கம்பிகள் ஆபத்தான முறையில் இருந்தது. அதீத கூட்ட நெரிசல் உள்ள பகுதி என்பதால் ஆபத்தான முறையில் பொதுமக்கள் பயணம் செய்து வந்தனர்.

இந்த பிரச்னை தொடர்பாக, கடந்த திங்கள்கிழமை விகடன் கள ஆய்வு செய்தது. அப்போது, பொது மக்கள் கூறியதுபோலவே, கம்பிகள் ஆபத்தாகவும், தடுப்புகள் அதிக இடைவெளிவிட்டு இருந்ததும் உறுதியானது.

ஆகையால் இதை பற்றி நமது விகடன் இணையதளத்தில் கடந்த 30-05-2023 அன்று செய்தி மற்றும் புகைப்படங்கள் வெளியானது. அதனை தொடர்ந்து நேற்று(01-06-2023) மாலை நேரத்தில் மாநகராட்சி மூலம் உத்தரவு பிறப்பிக்கட்டு இரவோடு இரவாக அதிகப்படியான தடுப்புகள் வைக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பணிகள் விரைந்து முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை மூலம், ஆபத்து குறைக்கப்பட்டுள்ளது. என்றாலும் முறையாக, முழுமையாக பணிகளை விரைவில் நிறைவு செய்ய வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கை!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.