Thangalaan: விக்ரம் ஜாலியா இருக்காரு: 'தங்கலான்' பட வேறலெவல் அப்டேட் கொடுத்த பா. ரஞ்சித்.!

தமிழ் சினிமாவின் அடுத்த பிரம்மாண்ட ரிலீசாக ‘தங்கலான்’ படம் வெளியாகவுள்ளது. சீயான் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் இந்தப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், விக்ரமுக்கு படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டதால் ஷுட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் ‘தங்கலான்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை இயக்குனர் பா. ரஞ்சித் வெளியிட்டுள்ளார்.

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது ‘தங்கலான்’. திரையுலகில் தொடச்சியாக சமூக கருத்துள்ள படங்களை இயக்கி வருகிறார் பா. ரஞ்சித். இவரது இயக்கத்தில் கடைசியாக ‘நட்சத்திரம் நகர்கிறது’ படம் ரிலீசானது. இந்தப்படத்தில் துஷாரா விஜயன், கலையரசன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்தப்படத்தை தொடர்ந்து தற்போது தங்கலானை இயக்கி வருகிறார் ரஞ்சித். விக்ரமின் நடிப்பிற்கு முழு தீனி போடும் படைப்பாக இந்தப்படம் உருவாகி வருகிறது. கடந்தாண்டு பூஜையுடன் விக்ரமின் 61 வது படமாக ‘தங்கலான்’ துவங்கப்பட்டது. பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டு வரும் தங்கலானை ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

‘தங்கலான்’ படத்தில் விக்ரமுடன் பசுபதி, பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். பீரியட் பிலிமாக 3டி தொழில்நுட்பத்தில் இந்தப்படம் உருவாகி வருகிறது. ‘தங்கலான்’ படம் கேஜிஎப் குறித்த உண்மை வரலாற்றை கூறும் விதமாக படமாக்கப்பட்டு வருவதாக இயக்குனர் பா. ரஞ்சித் தன்னுடைய பேட்டிகளில் கூறியுள்ளார்.

3 ஆண்டுகளுக்கு பிரேக்.. மக்கள் கையில் முடிவு: ‘மாமன்னன்’ பட விழாவில் உதயநிதி அதிரடி அறிவிப்பு.!

இந்தப்படத்தின் ஷுட்டிங் கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், படப்பிடிப்பு ஒத்திகையின் போது விக்ரம் விபத்தில் சிக்கியதால் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பிற்கு இடைவெளி விட்டு சிறிது காலம் ஓய்வில் இருந்தார் விக்ரம். இந்நிலையில் நேற்றைய தினம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற உதயநிதியின் ‘மாமன்னன்’ இசை வெளியீட்டு கலந்து கொண்டார் பா. ரஞ்சித்.

அப்போது ‘தங்கலான்’ படம் குறித்து பேசிய அவர், இதன் படப்பிடிப்பு வரும் ஜுன் 15 ஆம் தேதி மீண்டும் துவங்கி 15 நாட்கள் நடைபெறவுள்ளதாகவும், விக்ரம் ரொம்ப ஜாலியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், சீக்கிரமே இந்தப்படம் முடிந்து விடும், அதனை தொடர்ந்து ‘சார்பட்டா 2’ துவங்கும் என கூறியுள்ளார். பா. ரஞ்சித் கொடுத்துள்ள இந்த அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vijay: தங்கைக்கு வாழ்த்து தெரிவித்து மாலை அணிவித்த தளபதியின் மகன்: தீயாய் பரவும் வீடியோ.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.