137 தமிழகப் பயணிகள்… எத்தனை பேருக்கு சிகிச்சை? சென்னை வந்த சிறப்பு ரயில் அப்டேட்!

ஒடிசா ரயில் விபத்து குறித்த செய்திகள் கடந்த இரண்டு நாட்களாக தலைப்பு செய்தியாக மாறியுள்ளன. இதில் தமிழகத்தை சேர்ந்தவர்களும் இருந்ததால் மாநில அரசு சிறப்பு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது ஒடிசாவில் விபத்தில் சிக்கி காயமடைந்த தமிழகப் பயணிகள் சிறப்பு ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் அழைத்து வரப்பட்டனர். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒடிசா மாநிலம் பாலசோரில் ஏற்பட்ட பெரும் ரயில் விபத்தில் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளுக்குத் தேவையான மருத்துவம்

மீட்பு குழு அமைப்பு

மற்றும் இதர உதவிகளைச் செய்திடவும், உயிரிழந்தவர்களை கண்டறிந்து அவர்கள் குடும்பத்தினருக்கு உதவிடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மீட்புக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்

, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி ஐஏஎஸ் ஆகியோர் விபத்து நடந்த பாலசோர் என்ற இடத்தில் நடந்து வரும் மீட்புப் பணிகளைக் கவனித்து வருகின்றனர்.

கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு

மற்றொரு குழுவான வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த் ஐஏஎஸ், ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் திருமதி அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் ஆகியோர் ஒடிசாவில் இதற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில், ரயில் விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் விபரங்களை சேகரித்தும், மீட்புப் பணிகளுக்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியும் வருகின்றனர்.

ஒடிசாவில் இருந்து சிறப்பு ரயில்

இந்நிலையில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஒடிசாவில் இருந்து சிறப்பு ரயில் மூலம் 137 பயணிகள் சென்னை வருகை தந்தனர். இவர்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வருவாய் நிர்வாக ஆணையர்/கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர் ஐஏஎஸ், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ் ஆகியோர் வரவேற்றனர்.

மருத்துவ பரிசோதனை

இன்று காலை வருகை தந்த பயணிகளுக்கு காலை சிற்றுண்டியும் வழங்கப்பட்டது. இவர்களில் 36 பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 34 பயணிகள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அனுப்பி வைக்கப்பட்டவர்களில் 3 பயணிகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவக் குழுக்கள்

மற்ற பயணிகள் சிறு சிகிச்சைக்குப் பிறகு அவர்களது இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டதன் அடிப்படையில், ஒடிசா மாநிலத்திலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தடைகின்ற பயணிகளுக்கு தேவையான பரிசோதனை மற்றும் மேல் சிகிச்சை மேற்கொள்ள 30 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், இவர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிக்கென அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் 7 பேருந்துகளும், காவல் துறை மூலம் 50 டாக்ஸிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. கூடுதலாக 10 அவசர கால ஊர்தியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ரயில் நிலையத்தில் வீல் சேர், ஸ்டிரெச்சர் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வருவாய்த் துறை, சுகாதாரத் துறை அலுவலர்கள், வருகின்ற பயணிகளுக்குத் தேவையான உதவிகள் செய்திட பணியில் அமர்த்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.