ஒடிசாவில் மீண்டும் ரயில் விபத்து: ஐந்து பெட்டிகள் தடம் புரண்டன- மக்கள் அதிர்ச்சி!

ஒடிசாவில் உள்ள பார்கர் பகுதியில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.

சுண்ணாம்பு கற்கள் ஏற்றி வந்த சரக்கு ரயில் ஒன்று ஒடிசா மாநிலம் பார்கர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது தடம் புரண்டது. ரயிலின் ஐந்து பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கிவிட்டது.

இந்த விபத்தில் நல் வாய்ப்பாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று முதற்கட்டமாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாட்டையை சுழற்றும் எடப்பாடி: வைத்திலிங்கம் பிளானை உன்னிப்பா கவனிங்க – மாஜிக்களுக்கு உத்தரவு!

அந்த ரயில் பாதையில் வேறு ரயில்கள் வராமல் இருக்க முன்னெச்சரிக்கை செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளன. தடம் புரண்ட ரயிலை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணைகள் தொடங்கியுள்ளன.

கடந்த வெள்ளிக் கிழமை இரவு ஒடிசாவில் மூன்று ரயில்கள் விபத்துக்கு உள்ளாகி 290க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றது. இரு தினங்களில் ஒடிசாவில் மேலும் ஒரு ரயில் விபத்துக்கு உள்ளானது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.